சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க

பிறப்பும் கல்வியும்:

  • சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் – சினம்மையாரின் மகனாக 26.08.1883ஆம் நாள் பிறந்தார்.
  • சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.
  • கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.

தமிழ் பற்று:

  • “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார்.
  • வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.

பிறமொழியறிவு:

  • தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.
  • ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
  • காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை:

  • “இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஊறுங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார்.

பேசுப்பணி:

  • “திரு.வி.க நடை” என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.
  • பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.
  • அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.

எழுத்துப்பணி:

  • உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.
  • “அவருக்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது” என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.

உரைநடை நூல்கள்:

  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
  • இமயமலை அல்லது தியானம்
  • முருகன் அல்லது அழகு
  • சைவத்திறவு
  • சைவத்தின் சமரசம்
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  • நாயன்மார் வரலாறு
  • தமிழ்நூல்களில் பௌத்தம்
  • காதலா?முடியா?சீர்திருத்தமா?
  • என் கடன் பணிசெய்து கிடப்பதே
  • இந்தியாவும் விடுதலையும்
  • தமிழ்ச்சோலை
  • உள்ளொளி

செய்யுள் நூல்கள்:

  • முருகன் அருள்வேட்டல்
  • திருமால் அருள்வேட்டல்
  • கிருத்துவின் அருள்வேட்டல்
  • அருகன் அருகே
  • உரிமை வேட்டல்
  • பொதுமை வேட்டல்
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்

இதழ்ப்பணி:

  • தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.

தமிழ் வாழ்வினர்:

  • வயதாகி படுக்கையில் இருந்த போதும் “வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்” என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.
  • அவர் மனைவி இறந்த போதும், “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்.

Leave a Reply