நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

 

நூல் அமைப்பு

  • ஆசிரியர் = விளம்பி நாகனார்
  • ஊர் =விளம்பி
  • பாடல்கள் = 2 + 104
  • பாவகை = வெண்பா

வேறு பெயர்

  • துண்டு

நான்மணிக்கடிகை பெயர்க்காரணம்

  • நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை
  • கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.

கடவுள் வாழ்த்து

  • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
  • கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.

பொதுவான குறிப்புகள்

  • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
  • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • ஜி.யு.போப் இந்நூலின் 7, 100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
  • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”

நான்மணிக்கடிகை பாடல்

  • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
  • இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
  • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
  • வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
  • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
  • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
  • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
  • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
  • மனைக்கு விளக்கம் மடவாள்
  • மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
  • புதல்வர்க்கு விளக்கம் கல்வி
  • கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு

 

 

Leave a Reply