பரிபாடல்

பரிபாடல்

பரிபாடல்

பரிபாடலின் உருவம்

  • திணை = அகமும் புறமும்
  • பாவகை = பரிபாட்டு
  • பாடல்கள் = 70 (கிடைத்தவை 22)
  • புலவர் = 13
  • அடி எல்லை = 25-400

பெயர்க்காரணம்

  • பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
  • பா வகையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும்
  • தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும் வழக்கில் இருந்தது.

நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்

பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

உரிய தாகும் என்மனார் புலவர்.

பரிபாடல் வேறு பெயர்கள்

  • பரிபாட்டு
  • ஓங்கு பரி பாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசைபாடல் நூல்

தொகுப்பு

  • இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

பரிபாடல் உரை, பதிப்பு

  • பரிமேலழகர் உரை உள்ளது.
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

பாடல் பகிர்வு முறை

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; – மருவினிய

வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்

தெய்வம்

பழம்பாடலின் படி தற்போது இருப்பவை
திருமாலுக்கு 8

6

செவ்வேள்(முருகன்)

31 8
காடுகாள்(காளி) 1

0

வையை

26 8
மதுரை 4

0

மொத்தம்

70

22

பரிப் பாடல் கூறும் என்னுப்பெயர்கள்

எண்

என்னுப்பெயர்கள்

0

பாழ்

1/2

பாகு

9

தொண்டு

பரிபாடல் குறிப்பு

  • தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரி பாடல் மட்டுமே.
  • தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
  • பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
  • பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரி பாடல், கலித்தொகை
  • இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
  • “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
  • இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
  • தைந்நீராடல் பற்றி கூறும் நூல் = பரிபாடல்.
  • இந்நூல் இசையோடு பாடப்பட்டது.

மு.வ கூற்று

  • சங்க காலத்திற்குப் பிறகு பரிபாட்டு என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
  • விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை

முக்கிய அடிகள்

  • மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

            பூவொடு புரையுந் சீறார் பூவின்

           இதழகத்து அனைய தெருவம், இதழகத்து

           அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்

  • தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!

             கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ

 

 

Leave a Reply