பொது தமிழ் ஒரு வரி செய்திகள்

பொது தமிழ் ஒரு வரி செய்திகள்

பொது தமிழ் ஒரு வரி செய்திகள்

பொது தமிழ் ஒரு வரி செய்திகள்

       பொது தமிழ் ஒரு வரி செய்திகள் – TNPSC தேர்விற்கான தமிழ் பாடப்பகுதியில் உள்ள முக்கிய ஒரு வரி தகவல்கள் தொகுத்து இங்கு பதிவிடப்பட்டுள்ளது. 

1.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2.        அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு – வேள்விக்குடிச் செப்பேடு
3.        அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.        அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5.        அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6.        அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7.        அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8.        அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9.        அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.     அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.     அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் – வேங்கடசாமி  நாட்டார்,  இரா. வேங்கடாசலம்பிள்ளை
12.     அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.     அகநானூற்றின் பிரிவுகள் – 3 – களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை
14.     அகநானூற்றின் முதல் பகுதி – களிற்றுயானை நிரை
15.     அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.     அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.     அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் – நெடுந்தொகை
18.     அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.     அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.     அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.     அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா, பரிபாடல் (தொல்காப்பியர்)
22.     அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.     அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.     அசோகன் காதலி நாவலாசிரியர் – அரு.ராமநாதன்   
25.     அசோமுகி நாடக ஆசிரியர் – அருணாசலக் கவி
26.     அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் –  தழிஞ்சி
27.     அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் – ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
28.     அடிநூல் ஆசிரியர் – நத்தத்தனார்
29.     அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் — பொன்னப்ப காங்கேயன்
30.     அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் –  திருக்குறள்
31.     அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் – ஔவையார்
32.     அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.     அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து – நான்காம் பத்து
34.     அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் –  ஆலாபனை – 1999
35.     அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.     அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.     அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் –   மறைமலையடிகள்
38.     அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் – அம்பிகாபதி
39.     அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் – தி.ஜானகிராமன்
40.     அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.     அமிர்த சாகரர் பிறந்த ஊர் – தீபங்குடி
42.     அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.     அரசனால் செய்யப்படும் சிறப்பு – மாராயம், எட்டி, ஏனாதி, காவிதி,
44.     அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது – கண்படை நிலை – வாகைத் திணை
45.     அரசனுக்கு அறிவுரை கூறுவது – செவியறிவுறூஉ – பாடாண்
46.     அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.     அரிச்சந்திர புராண ஆசிரியர் – வீரகவிராயர்
48.     அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.     அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50.     அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
51.     அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.     அலி பாதுஷா நாடக ஆசிரியர் – வண்ணக் களஞ்சியப் புலவர்
53.     அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.     அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55.     அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் – அழிபடைத்தாங்கல்         
56.     அறநெறிச்சாரம் பாடியவர்  – முனைப்பாடியார்
57.     அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.     அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59.     அறுவகை இலக்கண ஆசிரியர் – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
60.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63.     ஆசாரக்கோவை ஆசிரியர் – பெருவாயின் முள்ளியார்
64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் – சவ்வாது புலவர்
68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் – சிந்தாதேவி
73.     ஆயிடைப்பிரிவு  – பரத்தையிற் பிரிவு
74.     ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.     ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் – குறிஞ்சிப் பாட்டு       
76.     ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் –  ஜெகசிற்பியன்
77.     ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78.     ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79.     ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் – திருவாவடுதுறை மடம்
80.     இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81.     இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல்
82.     இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83.     இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84.     இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  – 59
85.     இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம்
86.     இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87.     இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  – 3700
88.     இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89.     இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90.     இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91.     இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92.     இந்தியா எனும் இதழ் நடத்தியவர் – பாரதியார்
93.     இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94.     இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95.     இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96.     இயல், இசை, நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97.     இயற்பா,  இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் – நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.     இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99.     இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100.  இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

 

  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்
  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்
  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்
  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்
  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்
  • பொது தமிழ் ஒரு வரி செய்திகள்

Leave a Reply