மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வாழ்க்கை குறிப்பு

  • இயற்பெயர்                 = தெரியவில்லை
  • பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
  • ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர்
  • வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள்
  • மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம்
  • நெறி = ஞானம் நெறி
  • ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை
  • இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம்

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்

  • 8 ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார்
  • திருவெம்பாவை
  • போற்றித் திருவகவல்

திருவாசகம் வேறு பெயர்கள்

  • தமிழ் வேதம்
  • சைவ வேதம்

திருக்கோவையார் வேறு பெயர்கள்

  • திருசிற்றம்பலக்கோவை
  • ஆரணம்
  • ஏரணம்
  • காமநூல்
  • எழுத்து
  • இராசாக்கோவை

மாணிக்கவாசகர் சிறப்பு பெயர்கள்

  • திருவாதவூரார்
  • தென்னவன் பிரம்மராயன்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • வாதவூர் அடிகள்
  • பெருந்துறைப் பிள்ளை
  • அருள் வாசகர்
  • மணிவாசகர்

சிறப்புகள்

  • மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
  • இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார் (பரி=குதிரை)
  • பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
  • திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
  • இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.

தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

  • இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
  • பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
  • புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
  • “திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை

மாணிக்கவாசகர்

திருவாசகம் சிறப்புகள்

  • திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
  • “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
  • 51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
  • திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.

திருக்கோவையார் சிறப்புகள்

  • “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
  • திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
  • “இராசாக்கோவை” என்று அழைக்கப்படும் நூல் = திருக்கோவையார் ஆகும்.
  • இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து
  • இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
  • திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.

குறிப்புகள்

  • அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
  • மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
  • மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.

மேற்கோள்

  • நமச்சிவாயம் வாழ்க நாதம் தாள்வாழ்க
  • ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
  • தென்னாடுடைய சிவனே போற்றி
  • எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  • வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
  • உற்றாரை யார்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
  • அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
  • புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
  • பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி

 

 

 

2 thoughts on “மாணிக்கவாசகர்”

Leave a Reply