11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்

11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்

11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்

11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
  • செய்திகளை மக்களுக்கு அறிமுகம் செய்யும் முறையை கொண்டு வந்தவர் = ஜூலியஸ் சீசர்
  • ஜூலியஸ் சீசர் அவர்கள், “தினசரி செய்தி” (Acta Diurna) என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச் செய்திகளை எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.
  • “இதழியலின் தந்தை” எனப்படுபவர் = ஜூலியஸ் சீசர்.
  • இந்தியாவின் இதழ்களின் முன்னோடி எனப்படுபவர் = மன்னர் அசோகர் (அவரின் கல்வெட்டு முறை)
  • காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்
  • முதன்முதலில் அச்சுப்பொறியை கண்டுபிடித்தவர் = ஜெர்மனியை சேர்ந்த ஜோகன்னஸ் கூடன்பர்க்.

இந்தியாவில் இதழ்கள்

11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
  • இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் துவக்கிய “மெட்ராஸ் கூரியர்” (Madras Courier)

தமிழ் இதழ்கள்

  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
  • தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் = பெர்சிவல் பாதிரியாரின் “தினவர்த்தமானி”
  • கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்தில் துவங்கப்பட்ட மாத இதழ் = ஜனவிநோதினி.
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்

விடுதலை போராட்டத்தில் தமிழ் இதழ்கள்

  • 1882 இல் “சுதேசமித்திரன்” வார இதழை துவங்கியவர் = ஜி.சுப்பிரமணியம்.
  • சுதேசமித்திரன் இதழ் 1889 இல் நாளிதழாக மாறியது.
  • 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் பாரதியார் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
  • 1907 இல் பாரதியார் துவங்கிய தமிழ் மாத இதழ் = இந்தியா
  • 1907 இல் பாரதியார் துவங்கிய ஆங்கில மாத இதழ் = பால பாரதம்
  • 1917 இல் திரு.வி.க துவக்கிய நாளிதழ் = தேசபக்தன்
  • சுதேசமித்திரனுக்கு பிறகு தமிழ்நாட்டில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய நாளிதழ் = தேசபக்தன் (திரு.வி.க)

விடுதலை போரில் தேசிய இதழ்கள்

  • திலகர் ஆரமபித்த நாளிதழ் = கேசரி
  • அரவிந்தர் நடத்திய இதழ் = வந்தே மாதரம்
  • சுவாமி விவேகானந்தர் நடத்திய இதழ் = சகோதரர்.
  • காந்தி நடத்திய இதழ் = இந்தியன் ஒபினியன் (தென் ஆப்ரிக்காவில் நடத்தியது)
  • காந்தி நடத்திய இதழ் = யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் (இந்தியாவில் நடத்திய இதழ்)

திரு.வி.க வின் இதழ் பணி

  • தமிழ் இதழியலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களையே சாரும்.
  • இவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ் சொற்கள், சிறப்பொடு வளர்ந்து வந்தது.

தனித்தமிழ் இயக்க இதழ்கள்

  • மறைமலை அடிகள் நடத்திய இதழ் = அறிவுக்கடல்
  • சி.பா. ஆதித்தனார் நடத்திய இதழ் = தமிழன், தமிழ்க்கொடி
  • பாரதிதாசன் நடத்திய இதழ் = குயில்
  • பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் = தென்மொழி, தமிழ்ச்சிட்டு
  • பெரியார் நடத்திய இதழ் = விடுதலை, குடியரசு

பெண்ணுரிமை

  • பெண்ணுரிமைக்காக போராடிய இராஜா இராம் மோகன்ராய் நடத்திய இதழ் = சம்பத் கௌமுதி

பாரதியார்

  • தமிழ் இலக்கியத்தின் பல்வேறுதுறைகளில் புதுமைகளைத் தொடங்கி வைத்த பாரதியார், இதழியலிலும் புத்தெழுச்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
  • ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ (கார்ட்டூன்) என்று அழைக்கப்படும் கருத்துப்படங்களை தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், வேடிக்கைசித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
  • கருத்துப்படங்களை பாரதியார் “விகடச்சித்திரம்” என்று கூறுகிறார்.
  • 1850 ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ (Delhi Sketch Book), என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.
  • தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும்.
  • கருத்துப்பட வடிவத்தினை இவ்வளவு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் காட்டியவர் பாரதியே.
  • கருத்துப்படங்களுக்காகவே ‘இந்தியா’ இதழினை அனைவரும் விரும்பிப் படித்தனர்.
  • பாரதியின் கருத்துப்படங்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதும்போது, அந்தச் சித்திரம்தான் முதலில் என்னை அவர்தம் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம்தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று” என்று கூறுவதிலிருந்து, பாரதியின் கருத்துப்படத்திற்குக் கிடைத்த வெற்றியினை நாம் அறியலாம்.

பெரியார்

  • பெரியார் 02.05.1925 அன்று “குடியரசு” என்ற வார இதழை துவக்கினார்.
  • 1935 இல் நீதிக்கட்சியினரால் துவக்கப்பட்ட “விடுதலை” என்ற இதழ், பின்னாளில் பெரியாரின் கைக்கு வந்தது.
  • பெரியார் நடத்திய இதழ்கள் = விடுதலை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
  • தமிழில் எழுத்து சீர்திருத்தம் மேற்கொண்டவர் பெரியார்.

 

 

Leave a Reply