11TH TAMIL தொல்காப்பியம்

11TH TAMIL தொல்காப்பியம்

11TH TAMIL தொல்காப்பியம்
11TH TAMIL தொல்காப்பியம்

11TH TAMIL தொல்காப்பியம்

  • தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியமாகும்.
  • இந்நூல் எழுத்து, சொல் மட்டுமன்றிப் பொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறுவதாகும்.
  • நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை இதன் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் விளக்குகிறது.

அருஞ்சொற்பொருள்

  • இகக்கும் – நீக்கும்
  • இழுக்கு – குற்றம்
  • வினாயவை – கேட்டவை

பொருள்

  • சிறப்புடைய மாணவர் எனப்படுவோர் உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய இலக்கணங்களை ஆசிரியர்களிடம் குற்றமின்றி அறிவர், பாடங்களைப் போற்றிக் கற்பர்.
  • ஆசிரியர்களிடம் கற்ற பாடங்களை மீண்டும் நினைத்துப் பயிற்சி பெறுவர்.
  • ஆசிரியரை அணுகிப் பாடக்கருத்துகளைக் கேட்டுத் தெளிவு அடைவர்.
  • ஆசிரியர்களைப் போன்ற உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்துரையாடி விளக்கம் பெறுவர்.
  • தங்களது ஐயங்களை ஆசிரியர்களிடம் வினவித் தெளிவுறுவர். அவ்வாறு தெளிவுற்ற கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்தித் தெளிவடையச் செய்வர்.
  • ஆசிரியர் கூறும் கருத்துகளை ஒருமுறைக்கு இருமுறை கேட்கும் மாணவர்கள் நூலைப் பிழையின்றிக் கற்கும் திறன் பெறுவர்.
  • மூன்று முறை கேட்போர் பாடக்கருத்துகளைப் பிறர்க்கு முறையாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெறுவர்.
  • இத்தன்மையில் பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள் அறியாமையிலிருந்து நீங்கிச் சிறந்து விளங்குவர்.

இலக்கணக்குறிப்பு

  • அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் = தொழிற்பெயர்கள்
  • நனிஇகக்கும் = உரிச்சொற்றொடர்

பிரித்து எழுதுக

  • இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
  • முறையறிந்து = முறை + அறிந்து

தொல்காப்பியம் நூல் குறிப்பு

  • தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கணநூல் = தொல்காப்பியம்.
  • இதன் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் இருபத்தேழு இயல்கள் உள்ளன.
  • தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.
  • அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர்.
  • நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரைவிளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது.

தொகாப்பிய நூல் பதிப்பு

  • தொல்காப்பியம் முதன் முதலில் 1847 ஆம் ஆண்டு மகாலிங்கையரவர் என்பவரால், நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் எழுத்ததிகாரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
  • தமிழில் அச்சிடப்பட்ட முதல் இலக்கண நூல் = நன்னூல் (1835)
  • தொல்காப்பியம் முழுவதையும் முதன் முதலில் அச்சடித்து வெளியிட்டவர் = சாமுவேல்பிள்ளை ஆவார். இவர் 1858 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டார்.

Leave a Reply