12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

  • தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும்.
  • பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம்.
  • இது தொண்ணூற்றாறு வகைப்படும்.
  • 12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

 

வகையும் தொகையும்

  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.
  • ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.
  • இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன.

அந்தாதி என்றால் என்ன

  • ஒரு பாடலின் இறுதி எழுத்தோ , அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவது அந்தாதி.
  • அந்தம்+ஆதி = அந்தாதி. ; அந்தம்-இறுதி; ஆதி- தொடக்கம்.
  • இது “சொற்றொடர்நிலை” எனப் பெயர்பெறும்.
    • “அருணகிரி அந்தாதி” எழுதியவர் = குகை நமச்சிவாயர்
12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

கலம்பகம் என்றால் என்ன

  • அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
  • கலம் + பகம் = கலம்பகம்
  • கலம் = 12
  • பகம் = 6
  • பாட்டுடைத் தலைவனை ஒரு பெண் புகழ்ந்துப் பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தை கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும்.
    • “திருக்காவலூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர் = வீரமாமுனிவர்

பரணி சிற்றிலக்கியம்

  • போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்.
    • தக்கயாகப்பரணி நூலின் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்

கோவை சிற்றிலக்கியம்

  • அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும்.
  • கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது.
  • தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான். இவன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவன் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.
    • தஞ்சைவாணன் கோவை நூலை எழுதியவர் = பொய்யாமொழி புலவர்

சதகம் சிற்றிலக்கியம்

  • சதகம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம்.
  • சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.
    • “அறப்பளீசுர சதகம்” நூலை இயற்றியவர் = அம்பலவாணக் கவிராயர்
12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்

பிள்ளைதமிழ்

  • கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
  • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
  • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாடுவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் என்பர்.
  • முதல் ஏழு பருவங்களோடு இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பருவங்கள் அமைத்துப் பாடுவது பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் குறிப்பிடுவர்.
    • “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” நூலை இயற்றியவர் = புலவர் புலமைப்பித்தன்
    • “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” நூலை இயற்றியவர் = கவிஞர் மணிமேகலை குப்புசாமி

பள்ளு

  • சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்.
  • உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும்.

சிற்றிலக்கிய வகைகள் 96

  1. அகப்பொருள்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அநுராகமாலை
  5. அரசன் விருத்தம்
  6. அலங்கார பஞ்சகம்
  7. ஆற்றுப்படை
  8. இணைமணி மாலை
  9. இயன்மொழி வாழ்த்து
  10. இரட்டை மணிமாலை
  11. இருபா இருபஃது
  12. உலா
  13. உலாமடல்
  14. உழத்திப்பாட்டு
  15. உழிஞைமா
  16. உற்பவ மாலை
  17. உசல்
  18. ஊர் நேரிசை
  19. ஊர் வெண்பா
  20. ஊரின்னிசை
  21. எண் செய்யுள்
  22. எழு கூற்றிருக்கை
  23. ஐந்திணைச் செய்யுள்
  24. ஒருபா ஒருபஃது
  25. ஒலியல் அந்தாதி
  26. கடிகை வெண்பா
  27. கடைநிலை
  28. கண்படை நிலை
  29. கலம்பகம்
  30. காஞ்சி மாலை
  31. காப்பியம்
  32. காப்பு மாலை
  33. குழமகன்
  34. குறத்திப்பாட்டு
  35. கேசாதி பாதம்
  36. கைக்கிளை
  37. கையறுநிலை
  38. சதகம்
  39. சாதகம்
  40. சின்ன ப் பூ
  41. செருக்கள வஞ்சி
  42. செவியறிவுறுஉ
  43. தசாங்கத்தயல்
  44. தசாங்கப்பத்து
  45. தண்டக மாலை
  46. தாண்டகம்
  47. தாரகை மாலை
  48. தானை மாலை
  49. தும்பை மாலை
  50. துயிலெடைநிலை
  51. தூது
  52. தொகைநிலைச் செய்யுள்
  53. நயனப்பத்து
  54. நவமணி மாலை
  55. நாம மாலை
  56. நாற்பது
  57. நான்மணி மாலை
  58. நூற்றந்தாதி
  59. நொச்சிமாலை
  60. பதிகம்
  61. பதிற்றந்தாதி
  62. பயோதரப்பத்து
  63. பரணி
  64. பல்சந்த மாலை
  65. பவனிக்காதல்
  66. பன்மணி மாலை
  67. பாதாதி கேசம்
  68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்)
  69. புகழ்ச்சி மாலை
  70. புறநிலை
  71. புறநிலை வாழ்த்து
  72. பெயர் நேரிசை
  73. பெயர் இன்னிசை
  74. பெருங்காப்பியம்
  75. பெருமகிழ்ச்சிமாலை
  76. பெருமங்கலம்
  77. போர்க்கெழு வஞ்சி
  78. மங்கல வள்ளை
  79. மணிமாலை
  80. முதுகாஞ்சி
  81. மும்மணிக்கோவை
  82. மும்மணிமாலை
  83. மெய்க்கீர்த்தி மாலை
  84. வசந்த மாலை
  85. வரலாற்று வஞ்சி
  86. வருக்கக் கோவை
  87. வருக்க மாலை
  88. வாமடல் – மடவேறுதல்
  89. வாகை மாலை
  90. வாதோரண மஞ்சரி
  91. வாயுறை வாழ்த்து
  92. விருத்த இலக்கணம்
  93. விளக்கு நிலை
  94. வீர வெட்சி மாலை
  95. வெற்றிக் கரந்தை மஞ்சரி
  96. வேனில் மாலை

Leave a Reply