குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியம்
குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியம்

  • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது குறவஞ்சி இலக்கியம்
  • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
  • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
  • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
  • 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று
  • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
  • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்
  • இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்த இலக்கியம் குறவஞ்சி
  • குறவஞ்சி பல வகைப் பாக்கள் கலந்து வரப் பாடப்படும்.
  • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் = குமரகுருபரரின் மீனாட்சிக் குறம்
  • முதல் குறவஞ்சி நூல் = குற்றால குறவஞ்சி
  • பன்னிரு பாட்டியல் குறவஞ்சியை,

இறப்பு நிகழ்வெதிர் வெண்ணுமுக் காலமும்

திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே

குறவஞ்சி நூல்கள்

திருக்குற்றால குறவஞ்சி (முதல் குறவஞ்சி)

திருகூடராசப்ப கவிராயர்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்

தமிழரசி குறவஞ்சி

வரத நஞ்சையப்ப பிள்ளை
பெத்தலேகம் குறவஞ்சி

வேதநாயக சாஸ்திரி

கூட்டுறவுக் குறவஞ்சி

தஞ்சைவாணன்
வண்ணக்குறவஞ்சி

விஸ்வநாத சாஸ்திரி

திருக்குற்றால குறவஞ்சி

  • இதன் ஆசிரியர் = திரிகூடராசப்ப கவிராயர்
  • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
  • முதல் குறவஞ்சி நூல் இதுவே
  • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிள்ளப்பகுதியை இனாமாக வழங்கினார்.
  • குற்றால குறவஞ்சி நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
  • குற்றால குறவஞ்சி நூலின் தலைவி = வசந்தவல்லி
  • திரிகூடப்பராசக் கவிராயர்  இயற்றிய மற்ற நூல்கள் = குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

  • இதன் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
  • இவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தவர்.
  • இவரின் ஆசிரியர் = வைத்தியநாத தேசிகர்
  • இவர் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
  • இவர் இயற்றிய நூல்கள் = கொட்டையூர் உலா, திருவிடைமருதூர் புராணம், திருமண நல்லூர் புராணம், கோடீச்சரக் கோவை
  • சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் = தஞ்சை சரபோஜி மன்னர்
  • சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நூலின் தலைவி = மதனவல்லி

தமிழரசி குறவஞ்சி

  • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
  • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
  • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
  • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
  • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
  • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
  • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணைக இந்நூலை இயற்றினார்.
  • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

பெத்தலகேம் குறவஞ்சி

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலா வரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
  • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.

Leave a Reply