7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

  • “பிகிநிதயா” என்பது எந்த சமய நூல் ஆகும் = பௌத்த சமயம்.
  • கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் 62 வகைப்பட்ட தத்துவ, சமயப்பள்ளிகள் இருந்ததாக கூறும் நூல் = “பிகிநிதயா” என்னும் பௌத்த நூல்.
  • கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனை வகைப்பட்ட தத்துவ, சமயப்பள்ளிகள் இருந்ததாக “பிகிநிதயா” என்னும் பௌத்த நூல் கூறுகிறது = 62 தத்துவ, சமயப்பள்ளிகள்.
  • இடைக்காலத்தின் பிற்பகுதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்த சமயம் = ஆசீவகம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சமணம் குறிப்புகள்

  • மகாவீரரின் அறிவுரைகள் பல் ஆண்டுகளாக வாய்மொழியாகவே மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தது.
  • மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா நிலை) சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகே சம அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் ஒன்று கூடி, தங்கள் சமயத்தின் போதனைகள், விதிகளை தொகுக்க முயற்சி மேற்கொண்டனர்.
  • முதல் சமணப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
  • சமணப்பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்? = பாடலிப்புத்திரம்.
  • முதல் சமணப் பேரவைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
  • இரண்டாவது சமணப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடம் = வல்லபி.
  • இரண்டாவது சமணக் கூட்டத்தின் முடிவின் படை, சமண இலக்கியங்கள தொகுக்கப்பட்டன.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

சமணத்தின் ஐந்து பெரும் உண்மைகள்

  1. அகிம்சை = எந்த உயிரினத்தையும் துன்புறுத்த கூடாது
  2. சத்யா = உண்மை
  3. அசௌர்யா = திருடாமை
  4. பிரம்மச்சரியா = திருமணம் செய்து கொள்ளாமை
  5. அபரிக்கிரகா = பணம், பொருள், சொத்து மீது ஆசை கொள்ளாமை

சமணப் பிரிவுகள்

  • சமண சமயத்தின் இரு பிரிவுகள் யாவை = திகம்பரர், சுவேதாம்பரர்.
  • எப்பொழுது சமண சமயத்தில் இரு பிரிவுகள் உருவாகின = கி.பி. முதலாம் நூற்றாண்டில்.
  • எந்த நூலை திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினரும் தங்களின் அடிப்படை நூலாக ஏற்றுக் கொண்டனர் = ஆகம சூத்திரங்கள்.

சமண இலக்கியங்கள்

  • சமண இலக்கியங்கள் பொதுவாக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    1. ஆகம சூத்திரங்கள்
    2. ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்

ஆகம சூத்திரங்கள்

  • எந்த மொழியில் சமண சமயத்தின் புனித நூலான “ஆகம சூத்திரங்கள்” எழுதப்பட்டுள்ளது = அர்த்த-மகதி பிராகிருத மொழி.
  • மகாவீரரின் நேரடி போதனைகள் என்னாவரு தொகுக்கப்பட்டுள்ளன = ஆகம சூத்திரங்கள் நூலாக.
  • ஆகம சூத்திரங்களில் உள்ள நூல்களின் எண்ணிக்கை = 12.
  • மகாவீரரின் நேரடி சீடர்களால் தொகுக்கப்பட்டவை = ஆகம சூத்திரங்கள்.
  • ஆகம சூத்திரங்கள் 12 நூல்களில் 12 வது ஆகம சூத்திர நூல் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்

  • ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் என்பது = ஆகம சூத்திரங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள் போன்றவை ஆகும்.
  • சமண சமையத்தில் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் மொத்தம் எத்தனை = 84.
    1. 41 சூத்திரங்கள்
      • 11 அங்கங்கள் (சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்)
      • 12 உப அங்கங்கள் (நெறிமுறைக் குறிப்பேடுகள்)
      • 5 சேடாக்கள் (துறவிகளுக்கான நடத்தை விதிகள்)
      • 5 மூலங்கள் (சமணத்தின் அடிப்படை கோட்ப்பாடுகள்)
      • பத்திரபாகுவின் “கல்பசூத்திரம் போன்ற 8 நூல்கள்
    2. 12 உரைகள்
    3. ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா)
  • சமண சமையத்தின் தாக்கம் பெருமளவில் இருப்பதாக நம்பப்படும் நூல் = பஞ்சதந்திரம்.
  • சமண சமயத்தின் 11 அங்கங்கள் நூல்களை பின்பற்றுவோர் = சுவேதாம்பரர்கள்.

கல்பசூத்திரம்

  • “கல்பசூத்திரம்” எனும் நூலின் ஆசிரியர் = பத்ரபாகு.
  • சமண சமையத்தின் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் = பத்ரபாகுவின் கல்பசூத்திரம்.
  • “ஜைனசரிதா” என்பது = கல்பசூத்திரம் நூலின் முதல் பகுதி.
  • சமண சமயத்தை நிறுவியவர் = ரிஷபதேவர்.
  • சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷபதேவர்.
  • சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர்.
  • சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் (24வது தீர்த்தங்கரர்) = மகாவீரர்.
  • “கல்பசூத்திரம்” நூலில் யாருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது = 23வது தீர்த்தங்கரர் “பார்சவநாதர்” மற்றும் கடைசி தீர்த்தங்கரர் (24வது தீர்த்தங்கரர்) “மகாவீரர்” ஆகியோரின் வரலாறு இடம்பெற்றுள்ளது.
  • “கல்பசூத்ரா” நூலின் ஆசிரியர் = பத்ரபாகு.
  • பத்ரபாகு எந்த மௌரிய அரசரோடு தென்னிந்தியாவின் மைசூர் நகருக்கு புலம்பெயர்ந்தார் = சந்திரகுப்த மௌரியர்.
  • எந்த வருடம் பத்ரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தென்னிந்தியாவின் மைசூர் நகருக்கு புலம் பெயர்ந்தனர் = ஏறத்தாழ கி.மு. 296.

தீர்த்தங்கரர்கள் என்றால் என்ன

  • நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்கும் இடையே பாதை அமைப்பவரே “தீர்த்தங்கரர்கள்” ஆவர்.

தமிழ் மொழியில் சமண நூல்கள்

  • திருத்தக்கத்தேவர் இயற்றிய “சீவக சிந்தாமணி”.
  • சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்ட “நாலடியார்”.

தமிழ்நாட்டில் சமணம்

  • சமணர்கள் கர்நாடகாவில் இருந்து எந்த வழியாக தமிழகம் வந்தனர் = கொங்குப் பகுதி – காவேரி கழிமுகப்பகுதி – புதுக்கோட்டைப் பகுதி – பாண்டிய நாட்டுப் பகுதி.
  • தமிழர்கள் சமண மதத்தின் எப்பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தனர் = திகம்பரர்.
  • தமிழகத்தின் சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் = களப்பிரர்கள்.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

சித்தன்னவாசல் குகைக்கோவில்

  • சித்தன்னவாசல் எங்கு உள்ளது = புதுக்கோட்டை மாவட்டம்.
  • சித்தன்னவாசல் குகைக்கோவில் நிலத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது = 70 மீட்டர் உயரத்தில்.
  • சித்தன்னவாசல் குகைக் கோவிலில் இயற்கையாக அமைந்த குகை எவ்வாறு அழைக்கப்படுகிறது = ஏழடிப்பட்டம்.
  • ஏழடிப்பட்டம் என்றால் என்ன = சித்தன்னவாசலில் இயற்கையாக அமைந்த குகை.
  • சித்தன்னவாசலில் உள்ளவை = ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கை குகை மற்றும் ஒரு குடைவரைக் கோவில்.
  • சித்தன்னவாசல் குகையில் எத்தனை சமணப் படுக்கைகள் உள்ளன = 17.
  • அளவில் பெரிய கல் படுக்கையில் என்ன கல்வெட்டு உள்ளது = கி.மு இரண்டாம் நூற்றாண்டை தமிழ்-பிராமிக் கல்வெட்டு.
  • கல்வெட்டுகளில் யாரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன = சமணத் துறவிகளின் பெயர்கள்.
  • சித்தன்னவாசல் குடைவரைக் கோவில் என்னவாறு அழைக்கப்படுகிறது = அறிவர் கோவில்.
  • குகைக் கோவிலின் முகப்பில் உள்ள தூண்களின் எண்ணிக்கை = நான்கு.
  • சித்தன்னவாசல் குகைக்கோவில் எந்த காலத்தில் கட்டப்பட்டது = கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தில்.
  • சித்தன்னவாசல் குகைக்கோவிலில் உள்ள மண்டபம் = அர்த்த மண்டபம்.
  • சித்தன்னவாசல் குகைக் கோவிலில் உள்ளவை,
    • முன்பகுதி = அர்த்த மண்டபம்
    • பின்பகுதி = கருவறை (கர்ப்பகிரகம்).
  • மண்டபத்தில் உள்ளவை,
    • இடது பக்க சுவர்களில் = தீர்த்தங்கர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன
    • வலது பக்க சுவர்களில் = சமண ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

சித்தன்னவாசல் ஓவியங்கள்

  • சித்தன்னவாசல் குகை சுவர் ஓவியங்கள், அஜந்தா குகை சுவர் ஓவியங்களோடு ஒப்புமை கொண்டுள்ளன.
  • சித்தன்னவாசல் குகை சுவர் ஓவியங்கள், இந்திய அரசின் “தொல்லியல் துறை” சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
  • எந்த ஆண்டு இந்திய தொல்லியல் துறை, சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களை தங்கள் பாதுகாப்பில் கீழ் கொண்டு வந்தது = 1958.

காஞ்சியில் சமணம்

  • திருப்பருத்திக் குன்றம் உள்ள இடம் = காஞ்சிபுரம்.
  • சமண சமயம் செழித்தோங்கிய காலம் = பல்லவர் காலம்.
  • காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப்பயணி = யுவான் சுவாங்.
  • பல்லவ மன்னன் “மகேந்திரவர்மன்” தொடக்கத்தில் சமண சமயத்தை தழுவி இருந்தார்.
  • காஞ்சியில் எத்தனை சமணக் கோவில்கள் உள்ளன = இரண்டு. அவை,
    • திருப்பருத்திக் குன்றம் “திரிலோக்கியநாத ஜைனசுவாமி” கோவில்.
    • சந்திரபிரபா கோவில்.
  • இவ்விரு கோவில்களும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில்

  • எந்த ஆற்றின் கரையில் திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் அமைந்துள்ளது = பாலாறு.
  • “புஷ்பசேனா” எனும் சமண முனிவரின் சீடர் = இருகப்பா.
  • விஜயநகர ஆட்சியின் பொழுது புஷ்பசேனா எனும் சமண துறவியின் சீடரான “இருகப்பா” என்பவரும், விஜயநகர அரசரான இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் “சங்கீத மண்டபத்தை” கட்டினர்.
  • திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவிலில், “சங்கீத மண்டபம்” கட்டப்பட்ட ஆண்டு = 1387.
  • கோவிலில் வரையப்பட்ட ஓவியங்கள் அழிந்து விட்டன.
  • திருபருத்திக் குன்றம் ஜைன கோவிலின் இரண்டாவது கருவறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = திரிகூட பஸ்தி.
  • “திரிகூட பஸ்தி” என்றால் என்ன = திருபருத்திக் குன்றம் ஜைன கோவிலின் இரண்டாவது கருவறை திரிகூடா பஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த இரண்டாவது கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

சந்திரபிரபா கோவில்

  • சந்திரபிரபா எனும் தீர்த்தங்கரருக்கு அர்பணிக்கப்பட்ட கோவில் இது.
  • சந்திரபிரபா கோவில் உள்ள இடம் = திருபருத்திக் குன்றம், காஞ்சிபுரம்.

தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை

  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள சமணர்களின் எண்ணிக்கை = 83,359 ஆகும்.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள சமணர்களின் எண்ணிக்கை = 0.12% ஆகும்.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

கழுகுமலை சமண குடைவரைக் கோவில்

  • கழுகுமலை எங்குள்ளது = தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம்.
  • தமிழ்நாட்டில் சமணர் புத்துயிர் பெற்றதை குறிக்கும் கோவில் எது = கழுகுமலை சமண குடைவரைக் கோவில் ஆகும்.
  • கழுகுமலை சமண குடைவரைக் கோவிலை உருவாக்கியவர் = பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையான்.
  • “பஞ்சவர் படுக்கை” உள்ள இடம் = கழுகுமலை சமண குடைவரைக் கோவில், கோவில்பட்டி.
  • கல் படுக்கைகள் உள்ள பாறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = பஞ்சவர் படுக்கை.
  • இக்கோவிலில் தீர்தங்கர்களின் உருவங்களை தவிர “யக்சன், யக்சி” (ஆண், பெண் பணியாளர்) உருவச் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.
  • யக்சன், யக்சி உருவச்சிலைகள் உள்ள சமணக் கோவில் எது = கழுகுமலை சமணக் கோவில்.
  • கழுகுமலை சமண குடைவரைக் கோவில் காலம் = கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை

  • வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை அமைக்கப்பட்ட காலம் = கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
  • வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, லத்தேரி அருகே குக்கரப்பள்ளி கிராமம் என்னுமிடத்தில் உள்ள பைரவ மலையில் இக்கல் படுக்கைகள் உள்ளன.
  • மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கல் படுக்கைகள் உள்ளன.
  • இரு குகையில் நான்கு கல் படுக்கைகளும், ஒரு குகையில் ஒரே ஒரு கல் படுக்கையும் உள்ளன.
  • தலையணைப் பகுதி இல்லாமல் கல் படுக்கைகள் காணப்படும் இடம் = வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை குகை.
  • தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்? = வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை

திருமலை சமணர் கோவில்

  • திருமலை சமணர் கோவில் உள்ள இடம் = திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி.
  • திருமலை சமணர் படுக்கை குகை காலம் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
  • மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும், 22வது தீர்த்தங்கரான “நேமிநாதரின்” 16 மீட்டர் உயரச் சிலையும் உள்ளன.
  • 22வது சமணத் தீர்த்தங்கரர் = நேமிநாதர்.
  • தமிழ்நாட்டில் உள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானது = திருமலை சமணக் கோவிலில் உள்ள 16 மீட்டர் உயரமுடைய 22வது தீர்த்தங்கரான நேமிநாதரின் சிலை.

மதுரையில் சமணக் குகைகள்

  • மதுரையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சமணக் குகைகள் = 26 குகைகளும், 200 சமண கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும், 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

கீழக் குயில்குடி குடைவரைக் கோவில்

  • கீழக் குயில்குடி குடைவரைக் கோயில் எங்குள்ளது = மதுரை மாவட்டம்.
  • கீழக் குயில்குடி குடைவரைக் கோவில் சிற்பங்கள் எக்காலத்தை சேர்ந்தவை = கி.பி. 860 முதல் 900 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் பராந்த வீரநாராயண பாண்டியன் காலத்தை சேர்ந்தது ஆகும்.
  • கீழக் குயில்குடி குடைவரைக் கோவிலில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கை = 8.
  • “ஆதிநாதர்” என்று அழைக்கப்படுபவர் = ரிஷபதேவர் (ரிஷபநாதர்).

சமணர்களின் கல்வி பங்களிப்பு

  • சமூக, சமய வேறுபாடு இல்லாமல் அனைவர்க்கும் கல்வியை கற்றுக் கொடுத்தனர் சமணர்கள்.
  • “பள்ளி” என்பது = சமணர்களின் கல்வி மையங்களாகும்.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

பௌத்த சமயம்

  • புத்தரின் உண்மையான பெயர் = சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர்.
  • “சித்தார்த்தர் சாக்கிய முனி கௌதமர்” என்பதன் பொருள் = கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்” என்பதாகும்.
  • மகாவீரரின் சமகாலத்தவர் = புத்தர்.
  • போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார்.
  • அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்), துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துதல்) ஆகிய இரண்டு வழிமுறைகளும் தவறு எனக் கூறினார் புத்தர்.
  • இந்த இரண்டு வாழ்விற்கும் இடைப்பட்ட வழியை புத்தர் கண்டறிந்தார். அவை “எண் வகை வழிகள்” ஆகும்.

புத்தரின் எண்வகை வழிகள்

  1. நல்ல எண்ணங்கள்
  2. நல்ல குறிக்கோள்
  3. அன்பான பேச்சு
  4. நல்ல நடத்தை
  5. தீது செய்யா வாழ்க்கை
  6. நல்ல முயற்சி
  7. நல்ல அறிவு
  8. நல்ல தியானம்

புத்தரின் போதனைகள்

  • அணைத்து மனிதர்களும் சமம்.
  • புத்தர் தனது போதனைகளை “பிராகிருத” மொழியில் போதித்தார்.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

புத்தரின் நான்கு உண்மைகள்

  1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
  2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  3. ஆசையை துறந்தால், துயரங்களை வென்று மகிழ்ச்சியை பெறலாம்.
  4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் பெறலாம்.

பௌத்த சமய இலக்கியங்கள்

  • புத்தரின் போதனைகள் கி.மு. 80 இல் எழுதப்பட்டன.
  • புத்தரின் போதனைகள் “பாலி” மொழியில் நூல்களாக எழுதப்பட்டன.

திரிபிடகா

  • புத்தரின் போதனைகள் “திரிபிடகா” என்னும் நூலாக பாலி மொழியில் எழுத்து தொகுக்கப்பட்டுள்ளன.
  • பௌத்த விதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன. அவற்றை “மூன்று கூடைகள்” என்று அழைப்பர். அவை,
    • வினய பிடகா
    • சுத்த பிடகா
    • அபிதம்ம பிடகா

வினய பிடகா

  • பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று வினய பிடகா.
  • பௌத்த துறவிகளுக்கான (பிட்சுக்கள்) விதிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
  • துறவிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சுத்த பிடகா

  • பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று சுத்த பிடகா.
  • விவாதங்களைக் சான்றுகளைக் கொண்டு பௌத்த மதத்தின் மூலக் கோட்பாடுகளைக் ஊறுகின்றது.

அபிதம்ம பிடகா

  • பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று அபிதம்ம பிடகா.
  • இது நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குவதாகும்.

புத்த ஜாதகக் கதைகள்

  • பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான கதைகளைக் கூறும் நூல்.

புத்தவம்சா

  • கவிதை வடிவில் எழுதப்பட்ட நூல் = புத்தவம்சா.
  • கௌதம புத்தருக்கு முன்னர் எத்தனை புத்தர் வாழ்ந்ததாக “புத்தவம்சா” நூல் கூறுகிறது = 24 புத்தர்கள்.
  • கௌதம புத்தருக்கு முன்னர் 24 புத்தர்கள் வாழ்ந்ததாக கூறுகின்ற நூல் = புத்தவம்சம்.

மிலிந்தபன்கா

  • “மிலிந்தபன்கா” என்பதன் பொருள் = மிலிந்தாவின் கேள்விகள்.
  • யார் இருவருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் நிகழ்வே “மிலிந்தபன்கா” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது = புத்த துறவி நாகசேனர் மற்றும் கிரேக்க-பாக்டீரிய அரசர் மிலிந்தா.
  • மிலிந்தபன்கா நூலின் மூலம், எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.

மகாவம்சம் தீபவம்சம்

  • இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்று நூல்கள் = மகாவம்சம், தீபவம்சம்.
  • மகாவம்சம் = இலங்கை உட்பட இந்தியத் துணைக் கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது.
  • தீபவம்சம் = புத்தருடைய போதனைகள் மற்றும் அவற்றை பரப்ப இலங்கை வந்தோர் பற்றிய குறிப்புகள்

முதல் பௌத்த உரையாசிரியர்

  • “முதல் பௌத்த உரையாசிரியர்” என்று கூறப்படுபவர் = புத்தகோசா.
  • புத்தகோசா எழுதிய நூல் = “விசுத்திமக்கா”.

அஸ்வகோஷர்

  • அஷ்வகோஷர் எழுதிய நூல் = புத்தசரிதம்.
  • அச்வகோஷர் ஹீனயானப் பிரிவை சேர்ந்தவர்.
  • புத்தசரிதம் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.
  • சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில் எழுதப்பட்ட நூல் = புத்தசரிதம்.
  • புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் = புத்தசரிதம்.

தமிழகத்தின் பௌத்தம்

  • தமிழகத்தில் பௌத்த மதத்தை பரப்பியவர்கள் = இலங்கையை சேர்ந்த புத்த துறவிகள்.
  • இலங்கையை சேர்ந்த புத்த துறவிகள் மூலம் தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்கான சான்று = பஞ்ச பாண்டவ மலை.
  • சீனப்பயணி யுவான் சுவாங் தென்னிந்திய வந்த காலம் = கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
  • “வீரசோழியம்” = இலக்கண நூல்.
  • பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூல் “வீரசோழியம்” கி.பி. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நூலாகும்.
  • புத்தரின் செப்பு சிலைகள் தமிழகத்தில் எங்கு கிடைத்தன = நாகப்பட்டினம்.
  • நாகப்பட்டினத்தில் கிடைத்த புத்தரின் செப்பு சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது = கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.
  • புத்தரின் சிலைகள் தமிழகத்தில் எங்கு கிடைத்தன = சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமம்.
  • தமிழகத்தில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்த பொழுது விதிவிலக்காக இருந்த ஒரே இடம் = நாகப்பட்டினம்.
  • தமிழகத்தில் பௌத்த மதம் வீழ்ச்சி அடையாத ஒரே இடம் = நாகப்பட்டினம்.
  • நாகப்பட்டினத்தில் பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள் = சோழர்கள் (அரசியல் காரணங்களுகாக).
  • நாகப்பட்டினத்தில் “சூடாமணி விகாரத்தை” கட்டியவர் = ஸ்ரீவிஜய அரசர்.
  • சூடாமணி விகாரைக்கு ஆதரவு அளித்த சோழ அரசர் = ராஜராஜ சோழன்.
  • சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பௌத்த சமயம் தொடர்பான சொற்களை தமிழ்ப்படுத்தியவர் = சீத்தலைச் சாத்தனார்.
  • பௌத்த சமயம் தொடர்பான பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிப்பெயர்த்தவர் = சீத்தலைச் சாத்தனார்.
  • தாந்தரீக சடங்குகளில் திறன் பெற்று விளங்கிய “வஜ்ரபோதி” என்னும் பௌத்த துறவி, பல்லவ அரசபையில் இருந்து சீனா சென்றார் என்று கூறும் சான்று யாருடைய காலத்தை சேர்ந்தது = இரண்டாம் நரசிம்ம பல்லவன்.
  • பௌத்த சமயம் சரிவை சந்தித்து கொண்டிருந்த சமயம் எனக் கூறிய அரசர் = மகேந்திரவர்ம பல்லவன்.
  • பௌத்த சமயம் சரிவை சந்தித்து கொண்டிருந்த சமயம் எனக் கூறிய நூல் = மகேந்திரவர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகாசனம்”.

விகாரா என்றால் என்ன

  • விகாரா என்பது சம்ஸ்கிருத சொல்.
  • “விகாரா” என்பதன் பொருள் = வாழ்விடம் அல்லது இல்லம்.
  • தொடக்கத்தில் சுற்றி அலைந்து திரியும் துறவிகள் மழைக்காலத்தில் தங்குமிடம் விகாரைகள் ஆகும்.

தமிழகத்தில் பௌத்த விகாரை

  • அகழ்வாராய்ச்சியில் தமிழகத்தில் பௌத்த விகாரை கண்டுபிடிக்கப்பட்ட இடம் = காவிரிப்பூம்பட்டினம்.
  • அகழ்வாய்வில் காவிரிப்பூம்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை = புத்த விகாரை மற்றும் ஒரு பௌத்த கோவில்.
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

பத்மாசன நிலையில் புத்தரின் சிலை

  • தமிழகத்தில் பத்மாசன நிலையில் இருந்த புத்தரின் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது = திருவாரூர் மாவட்டம் திருநாட்டியட்டாங்குடி கிராமம்.
  • திருவாரூர் மாவட்டம் திருநாட்டியட்டாங்குடி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பத்மாசன நிலையில் உள்ள புத்தரின் சிலை எவ்வளு உயரம் கொண்டது = 1.03 மீட்டர் உயரம்.

ஆசீவகத் தத்துவம்

7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
  • ஆசீவகப் பிரிவை உருவாக்கியவர் = கோசலா மன்காலிபுத்தா.
  • ஆசீவக மதத்தை உருவாக்கியவர் = கோசலா மன்காலிபுத்தா.
  • ஆசீவகர்கள் எந்த கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர் = வினைப்பயன் (கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம்.
  • ஆசீவகத்திற்கான நூல்கள் எதுவும் இல்லை.
  • வரலாறு முழுவதும் ஆசீவகர்கள் அணைத்து இடங்களிலும் துன்பங்களையே சந்தித்துள்ளனர்.
  • இருந்த போதும் ஆசீவகர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகா, பாலாற்றின் பகுதிகளில் (வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்) ஆகிய இடங்களில் இருந்துள்ளனர்.
  • ஆசீவகர்கள் இறுதியாக எந்த சமயத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் = வைணவம்.

புத்தக வினாக்கள்

  1. சமணப்பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்? = பாடலிப்புத்திரம்.
  2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன? = அர்த்த-மகதி பிராகிருத மொழி
  3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது? = சமண மதம்.
  4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்? = வேலூர்.
  5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது? = பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையான்.
  6. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________ ? = திருமலை சமணக் கோவில் உள்ள 22 வது தீர்தங்கரான நேமிநாதரின் சிலை.
  7. புத்த சரிதத்தை எழுதியவர் __________________ ஆவார்? = அஷ்வகோஷர்.
  8. _________________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வருகை தந்தார்? = கி.பி. ஏழாம்.
  9. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என _________________ எடுத்துரைக்கிறது? = மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்.
  10. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ________________ ஆதரித்தனர்? = பௌத்தமதத்தை
  11. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாக கருதப்படுகிறது? = சரி.
  12. வரலாறு முழுவதும் ஆசீவகர்கள் அணைத்து இடங்களிலும் அடக்கமுறையை சந்திக்க நேர்ந்தது? = சரி.
  13. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இன்றி அனைவர்க்கும் கல்வி கற்பிக்கப்பட்டது? = சரி.
  14. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகிய மிகச்சிறந்த புனிதத்தலங்கள் ஆகின? = தவறு.
  15. சோழர் காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது? = தவறு.

 

 

Leave a Reply