OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

                     OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச அகிம்சை தினம்

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம், “சர்வதேச அகிம்சை தினமாக” (INTERNATIONAL DAY OF NON-VIOLENCE) ஆக கொண்டாடப்படுகிறது
  • 15 ஜூன் 2007 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, அக்டோபர் 2 அகிம்சை தினமாக கடைபிடிக்க வலியுறுத்தியது
  • இந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று குறிப்பிடப்படுகிறது
  • உலக அமைதி சின்னமாக கருதப்படும் காந்தி, அக்டோபர் 2, 1869 அன்று குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். இந்த ஆண்டு அவரின் 152-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது

இந்திய விளம்பரதார சங்கத்தின் புதிய தலைவர்

  • இந்திய விளம்பரதார சங்கத்தின் (ISA – INDIAN SOCIETY OF ADVERTISERS) புதிய தலைவராக “சுனில் கட்டாரியா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • கோட்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் தலைவராக பல ஆண்டுகள் இவர் பணிபுரிந்துள்ளார்

ஆப்பிரிக்காவின் முதல் இலக்கிய நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவின் புதிய புத்தகம்

  • ஆப்பிரிக்காவின் முதல் இலக்கிய நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவின் புதிய புத்தகம் “CHRONICLES FROM THE LAND OF THE HAPPIEST PEOPLE ON EARTH” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது
  • இவர் இஐதியாக 1973 ஆம் ஆண்டு “SEASON OF ANOMY” என்ற நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். சுமார் 50 ஆண்டுகள் பிறகு தற்போது புதிய நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங் ஹாக்கியிலிருந்து ஓய்வு

  • டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங் ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  • சமிபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஹக்கி பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இந்த அணியில் ரூபிந்தர் பால் சிங்கும் விளையாடி இருந்தார்
  • 30 வயதான ரூபீந்தர் தனது 13 வருட ஹாக்கி வாழ்க்கையில் 223 போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி உள்ளார்.

டிஜிசக்சம்

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • மத்திய தொழிலாளர் அமைச்சகமும், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க “டிஜிசக்சம்” என்ற டிஜிட்டல் கல்வி முறை திட்டத்தை துவங்கி உள்ளன
  • இந்த கூட்டு முயற்சி கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை திறம்பட செயல்படுத்த ஏதுவாக திறன் வளர்ச்சி பயிற்சிகளை அளிக்க உள்ளது
  • முதல் வருடத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அடிப்படை திறன்கள் மற்றும் மேம்பட்ட கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திறன்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும்.
  • ஆகா கான் கிராமப்புற ஆதரவு திட்டம் இந்தியா (AKRSP- I = AGA KHAN RURAL SUPPORT PROGRAMME INDIA) மூலம் இத்திட்டம் இந்ஹியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது

2021 உலகளாவிய தலைமை விருது

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • அமெரிக்க இந்தியா பிசினஸ் கவுன்சில் (USIBC – UNITED STATES INDIA BUSINESS COUNCIL) அதன் 2021 உலகளாவிய தலைமை விருதை இந்தியாவின் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் டபே நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது
  • மல்லிகா சீனிவாசன், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE – TRACTORS AND FARM EQUIPMENTS LIMITED) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.

உலக பண்ணை விலங்குகள் தினம்

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, “உலக பண்ணை விலங்குகள் தினம்” (WORLD DAY FOR FARMED ANIMALS – WDFA) கடைபிடிக்கப்படுகிறது
  • பண்ணை விலங்கு நலனின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் காட்டுவதற்காக சர்வதேச விலங்குகள் நல அமைப்பான உலக விலங்குகள் பாதுகாப்பு மற்றும் விலங்குகளுக்கான கூட்டமைப்பால் இந்த நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உணவுக்காக வளர்க்கப்பட்டு படுகொலை செய்யப்படும் வளர்க்கப்படும் விலங்குகளின் தேவையற்ற துன்பம் மற்றும் இறப்பை வெளிப்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய காதி தேசியக் கொடி லடாக்கின் லேவில் ஏற்றப்பட்டது

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • அக்டோபர் 02, 2021 அன்று மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாளை முன்னிட்டு, காதி துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி லடாக் லேவில் நிறுவப்பட்டது.
  • காதி தேசியக் கொடியை லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் திறந்து வைத்தார்.
  • இந்த கொடி காதி கிராமம் மற்றும் தொழில்கள் ஆணையத்துடன் (KVIC – KHADI VILLAGE AND INDUSTRIES COMMISSION) இணைந்த மும்பையில் உள்ள காதி டயர்ஸ் மற்றும் பிரிண்டர்ஸ் (KHADI DYERS AND PRINTERS) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
  • மூவர்ணம் 225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது. இதன் எடை சுமார் 1,000 கிலோ / THE TRICOLOUR IS 225-FEET LONG AND 150-FEET WIDE. IT WEIGHS AROUND 1,000
  • கொடியை இந்திய இராணுவத்தின் 57 பொறியாளர் படைப்பிரிவு தயாரித்துள்ளது.
  • இந்த கொடி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கையால் கட்டப்பட்ட மற்றும் கையால் செய்யப்பட்ட பருத்தி காதி கொடி ஆகும்.

ஆயுதப்படை இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குனர்

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • R. ஷேக் ஆயுதப்படை இயக்குநரகத்தின் (ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள்) முதல் தலைமை இயக்குநராகப் (FIRST DIRECTOR-GENERAL OF THE ORDNANCE DIRECTORATE (CO-ORDINATION AND SERVICES)) பொறுப்பேற்றார்.
  • ஷேக் 1984 ஆம் ஆண்டின் இந்திய ஆயுதக் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரி ஆவார். வரன்கான் ஆயுத தொழிற்சாலையில் சிறிய ஆயுத வெடிமருந்து தயாரிப்பதற்கான நவீன உற்பத்தி வரி அமைப்பை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

உலக புன்னகை தினம்

OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் (WORLD SMILE DAY IS CELEBRATED ON THE FIRST FRIDAY IN OCTOBER) கொண்டாடப்படுகிறது.
  • 2021 இல், இந்த நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 1999 இல், முதல் உலக புன்னகை தினம் கொண்டாடப்பட்டது.
  • ஹார்வி பால் என்பவர், ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்தை வரைந்ததை நினைவூட்டும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • ஹார்வி பால் மாசசூசெட்ஸின் வோர்செஸ்டரைச் சேர்ந்த ஒரு கலைஞர்.

 

Leave a Reply