எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

மோனைத்தொடை:

  • முதல் எழுத்து ஒன்றி வருவது
  • ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்தும்
    வரலாம்.

அடிமோனை:

  • செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த
    அடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும்.
  • இன எழுத்தும் மோனையாக அமையும்.

எ.கா:

நாணால் உயிரைத் துறப்பார்
நாண் துறவார்

சீர்மோனை:

1. இணை மோனை:

  • அளவடியில் 1,2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது
  • இன எழுத்தும் மோனையாக அமையும்

எ.கா: கமழத் கமழத் தமிழிசை பாடினாள்.

2. பொழிப்பு மோனை:

  • அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது

எ.கா: நண்பற்றா ராகி நயமில் செய்தார்க்கும்

3. ஒருஉ மோனை

  • அளவடியில் 1,4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா: அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

4. கூழை மோனை

  • அளவடியில் 1, 2, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா.: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

5. மேற்கதுவாய் மோனை

  • அளவடியில் 1, 3, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி
    வருவது.

எ.கா. பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்

6. கீழ்க்கதுவாய் மோனை

  • அளவடியில் 1, 2, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது

எ.கா.: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

7. முற்று மோனை:

  • அளவடியில் 1, 2, 3, 4 சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை எனப்படும்.
  • அனைத்துச் சீர்களிலும் மோனை இருக்கும்.

எ.கா. கண்ணும் கருத்துமாய் கலைகளைக் கற்றான்

 

எதுகைத் தொடை

  • இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

அடி எதுகை:

செய்யுள் அடிகளின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடிஎதுகை எனப்படும்.

எ.கா:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன்

சீர் எதுகை

1. இணை எதுகை:

அளவடியில் 1, 2 சீர்களில் முதல் எழுத்து
அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: காற்றாரைக் கற்றது உணரார்……

2. பொழிப்பு எதுகை:

அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து
அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வகை

3. ஒருஉ எதுகை: (1, 4)

எ.கா.: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு

4. கூழை எதுகை: (1, 2, 3)

எ.கா.: நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி

5. மேற்கதுவாய் எதுகை: (1, 3, 4)

எ.கா.: என்னையும் இடுக்கண் துன்னுவித் தின்னிசை

6. கீழ்க்கதுவாய் எதுகை: (1, 2, 4)

எ.கா.: இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

7. முற்று எதுகை: (1, 2, 3, 4)

(அனைத்துச் சீர்களிலும் எதுகை இருக்கும்)
எ.கா.: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு

 

இயைபுத்தொடை

செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.

 

சீர் இயைபுத் தொடை வகைகள் காணும்பொழுது
அளவடியில் இறுதிச்சீரே முதற்சீராகக் கொண்டு வழங்கப்படும்.

எ.கா:

வாழிய தேவ பிரான்
எங்கும் நிறைந்த பிரான் – அடி இயைபு

பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – பொழிப்பு இயைபு

அன்புக்கோர் உரைக்கல்லாய் அருளுக்கோர் நிலையில்லாய் – பொழிப்பு இயைபு

Leave a Reply