அந்தாதி இலக்கியம்

அந்தாதி இலக்கியம்

அந்தாதி இலக்கியம்

அந்தாதி இலக்கியம்

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்

அந்தாதி என்றால் என்ன

  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
  • முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’

அந்தாதி வகைகள்

  • பதிற்றுப் பத்தந்தாதி
  • யமாக அந்தாதி
  • திரிபந்தாதி
  • நீரோட்டக யமாக அந்தாதி

அந்தாதி நூல்கள்

அற்புதத் திருவந்தாதி (முதல் அந்தாதி நூல்)

காரைக்கால் அம்மையார்
சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி

கம்பர்

திருவேங்கடத்தந்தாதி

பிள்ளை பெருமாள் ஐயங்கார்
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி  (குட்டித் திருவாசகம் எனப்படும்)

அதிவீரராம பாண்டியன்

வீரை அந்தாதி, கோமதி அந்தாதி

காவடிசிந்து அண்ணாமலையார்

அற்புதத் திருவந்தாதி

  • இந்நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
  • இவரின் இயற்பெயர் = புனிதவதி
  • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்
  • 63 நாயன்மார்களில் கோவிலில் இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் இருக்கும் பெருமை பெற்றவர்.
  • இவரின் பாடல்கள் மட்டும் “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படும்
  • கட்டளை கலித்துறை, அந்தாதி, மாலை என்னும் சிற்றிலக்கிய வகைகளை தொடங்கி வைத்தவர்.
  • ஒரு பொருளை பல பொருளில் பாடும் பதிக மரபை தொடங்கி வைத்தவர்.

திருவேங்கடத் தந்தாதி

  • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

Leave a Reply