ஆண்டாள்

ஆண்டாள்

ஆண்டாள்

ஆண்டாள்

  • பிறந்த ஊர் = ஸ்ரீவில்லிபுத்தூர்
  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
  • இவர் பூமகள் அம்சமாகப் பிறந்தவர்
  • இவர் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டார்
  • இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் = கோதை
  • இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமனனம் நடைபெற்ற இடம் = திருவரங்கம்
  • இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர்

திருப்பாவை

  • திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் = இராமானுஜர்
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
  • பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாவை என்பது இருமடியாகு பெயர்.
  • திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
  • இவரின் திருப்பாவை, பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது.
  • திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் = சங்கத் தமிழ் மாலை முப்பது

சிறப்பு பெயர்

  • கோதை (பெரியாழ்வார் இட்ட பெயர்)
  • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
  • நாச்சியார்

படைப்புகள்

  • திருப்பாவை
  • நாச்சியார் திருமொழி

மேற்கோள்

  • கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ?

            திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?

            மறுப்பு ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

            விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண்சங்கே!

  • வாரணம் ஆயிரம் சூழ வளஞ்செய்து

            நாரணன் நம்பி நடக்கின்றான் என்று

  • மானிடவர்க்கு என்று பேச்சுப் படின்

           வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

  • நாராயணனே நமக்கே பறைதருவான்

Leave a Reply