குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்

  • இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
  • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
  • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
  • இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்
  • இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்
  • இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
  • ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும்
  • திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார்

வேறு பெயர்கள்

  • கொல்லிக் காவலன்
  • கூடல் நாயகன்
  • கோழிக்கோ

படைப்பு

  • பெருமாள் திருமொழி

மேற்கோள்

  • ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ

            வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

            தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்

            மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே

  • மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்

            பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

           தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

            கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே

 

 

 

 

Leave a Reply