சீறாப்புராணம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம்

சீறாப்புராணம்

சீறாப்புராணம்

உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
  • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
  • நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
  • அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
  • உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.
  • இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
  • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சீறாப்புராணம் நூல் குறிப்பு

  • இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
  • சீறா – வாழ்க்கை, புராணம் – வரலாறு எனப் பொருள்படும்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது;
  • ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆனது.

சீறாப்புராணம்

புலி வசனித்த படலம்

சொற்பொருள்

  • தெண்டிரை – தெளிந்த அலைகள்
  • தடக்கரி – பெரிய யானை
  • தாரை – வழி
  • உழுவை – புலி
  • வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்
  • வள்ளுகிர் – கூர்மையான நகம்
  • நிணம் – கொழுப்பு
  • கிரி – மலை
  • தொனி – ஓசை
  • கவை – பிளந்த
  • எண்கு – கரடி
  • எழில் – அழகு
  • இடர் – துன்பம்
  • மாத்திரம் – மலை
  • புளகிதம் – மகிழ்ச்சி
  • பூதரம் – மலை
  • திறல் – வலிமை
  • மந்தராசலம் – மந்தரமலை
  • சிரம் – தலை
  • உன்னி – நினைத்து
  • கான் – காடு
  • திரள் – கூட்டம்
  • அடவி – காடு
  • கனல் – நெருப்பு
  • வனம் – காடு
  • மடங்கள் – சிங்கம்
  • கோடு – தந்தம்
  • உரும் – இடி
  • மேதி – எருமை
  • கேழல் – பன்றி
  • மரை – மான்
  • புயம் – தோள்
  • வேங்கை – புலி
  • கேசரி – சிங்கம்
  • கவின் – அழகு
  • தெரிசனம் – காட்சி
  • புந்தி – அறிவு
  • சந்தம் – அழகு
  • செகுதிடுவது – உயிர்வதை செய்வது
  • தெளிந்தார் – தெளிவு பெற்றார்

இலக்கணக்குறிப்பு

  • படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம்
  • தொழுது அறைகுவன் – வினையெச்சம்
  • நெடுநீர் – பண்புத்தொகை
  • புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம்
  • வெள்ளெயிறு – பண்புத்தொகை
  • முதிர்ந்தமேதி – பெயரெச்சம்
  • செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை
  • வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம்
  • சிரமுகம் – உம்மைத்தொகை
  • புகுக – வியங்கோள் வினைமுற்று
  • நன்று நன்று – அடுக்குத்தொடர்
  • நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தடக்கரி – உரிச்சொற்றொடர்
  • பொருந்தி – வினையெச்சம்
  • கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • பெருங்கரி – பண்புத்தொகை
  • பொதிந்தமெய் – பெயரெச்சம்
  • நின்ற வேங்கை – பெயரெச்சம்
  • பூதரப்புயம் – உவமைத்தொகை
  • பெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை
  • நனிமனம் – உரிச்சொற்றொடர்
  • உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • மலரடி – உவமைத்தொகை
  • கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

பிரித்தறிதல்

  • பணிந்திவர் = பணிந்து + இவர்
  • சிரமுகம் = சிரம் + முகம்
  • பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
  • தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
  • திண்டிறல் = திண்மை + திறல்
  • எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
  • வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
  • கரிக்கோடு = கரி + கோடு
  • பெருங்கிரி = பெருமை + கிரி
  • இருவிழி = இரண்டு + விழி
  • வெள்ளெயிறு = வெண்மை + எயிரு
  • உள்ளுறை = உள் + உறை
  • நெடுநீர் = நெடுமை + நீர்
  • அவ்வழி = அ + வழி
  • தெண்டிரை = தெண்மை + திரை

Leave a Reply