சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இரட்டுறமொழிதல்

தனிப்பாடல் – இரட்டுறமொழிதல்

சொற்பொருள்:

  • சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
  • துன்னலர் – பகைவர், அழகிய மலர்
  • சாடும் – தாக்கும், இழுக்கும்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர்: காளமேகப்புலவர்
  • பிறந்த ஊர்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
  • இயற்பெயர்: வரதன்
  • பணி: திருவரங்க மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.

பெயர் காரணம்:

  • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.

நூல் குறிப்பு:

  • புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே “தனிப்பாடல் திரட்டு”. இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதம் சென்று தேடித் தொகுத்தார்.

Leave a Reply