சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கணித மேதை இராமனுஜம்

கணித மேதை இராமனுஜம்

  • பிறப்பு: 22.12.1887
  • ஊர்: ஈரோடு
  • பெற்றோர்: ஸ்ரீநிவாசன் – கோமளம்
  • இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
  • தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.

கும்பகோணம்:

  • இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.

பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:

  • ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.

கார்:

  • 1880இல் இலண்டன் நகரில் “கார்” என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

எழுத்தர் பணி:

  • தந்தை ஸ்ரீனிவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் “எழுத்தர்” பணி கிடைத்தது.

பெர்னௌலிஸ் எண்கள்:

  • தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.

ஹார்டி & ஈ.எச்.நெவில்:

  • தமது கண்டுபிடிப்புகளை விரிவாக எழுதி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் “ஹார்டி” என்பவருக்கு கடிதமாக அனுபினார். ஹார்டி, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் இணைந்துள்ள திரிநிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில் மூலம், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார்.

உதவித்தொகை:

  • இராமனுஜம், 18.04.1914 அன்று திரிநிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு “60” பவுண்டு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. “ஹார்டி, லிட்டில்வுட்” இருவரும் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்.

ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்:

  • ஹார்டி, “ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தார்.

எஃப்.ஆர்.ஸ் பட்டம்:

  • 1918ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு எஃப்.ஆர்.ஸ் பட்டம் வழங்கப்பட்டது.

ஹார்டியின் பரிந்துரை:

  • ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு 250 பவுண்டு தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.

இராமானுஜன் எண்:

  • 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.

மறைவு:

  • 26.04.1920 அன்று தன்னுடைய 33ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பொதுவான குறிப்புகள்:

  • லிட்டில்வுட், இராமானுஜனை பற்றி “ஆய்வாலராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி” என்றார்.(ஜாகோபி என்பவர் ஜெர்மனியை சேர்ந்த கணித மேதை, ஆய்லர் என்பவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணையற்ற கணித மேதை).
  • இந்திரா காந்தி அவர்கள் இராமானுஜனை பற்றி, “கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிபிடத்தக்க ஓர் இடத்தைப் பிற்ற பிறவிக் கணிதமேதை” என்றார்.
  • பேராசிரியர் ஈ.டி.பெல் என்பவர்,”இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு” என்றார்.
  • இலண்டன் ஆளுநர் லார்ட்மென்ட் லண்ட் என்பவர் “இராமானுஜன் முதல் தரமான கணித மேதை” என்றார்.
  • பேராசிரியர் சூலியன் கக்சுலி என்பவர், “ இராமானுஜன் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை” என்றார்.
  • 22.12.1962 அன்று அவரது 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடுவண் அரசு பதினைந்து காசு அஞ்சல்தலையை 2500000 வெளியிட்டது. வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
  • 1971ஆம் ஆண்டு, பேராசிரியர் இராமனுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது.
  • 03.10.1972 அன்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
  • அவர் பணியாற்றிய சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு “சீனிவாச இராமானுஜம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் “ரிச்சர்டும் ஆஸ்கேயும்” இணைந்து 1984இல் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழங்கினர்.
  • கணித குறிப்புகள் அடங்கிய 3 குறிப்பேடுகளையும் ஆராய்சிக் கட்டுரைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவரது குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை 1957ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டது.

Leave a Reply