சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழகத்தின் அன்னிபெசன்ட்

தமிழகத்தின் அன்னிபெசன்ட்

அறிஞர் அண்ணா:

  • அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.

இளமை காலம்:

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தேவதாசி குடியில் பிறந்தார்.
  • தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
  • வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார்.
  • அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும் பொது பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டார்.

சுயம்பு:

  • தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
  • சுயம்பு, அம்மையாரின் அணைத்து போராட்டங்களுக்கும் துணைப் புரிந்தார்.

முதல் போராட்டம்:

  • 1917இல் தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார்.
  • அதேவதாசி முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

காந்தி மீது பற்று:

  • அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
  • ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல் தனது கருத்துக்களை “கரும்பலகையில்” எழுதி வெளிப்படித்தினார்.

மூவர்ணக் கொடி ஆடை:

  • காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.
  • அம்மையார் மூவர்ணக் கோடியை ஆடையாக உடுத்தினார்.

குடிசையில் வாழ்தல்:

  • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
  • அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “காதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.

மொழிப்போர் பேரணி:

  • 1938ஆம் ஆண்டு நடந்த மொழிப்போர் பேரணியில் உறையூர்(திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள், 577 மைல் நடைபயணம் மேற்கொண்டார்.
  • இன்நடைப்பயணத்தின் பொது 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.
  • அப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண் அம்மையார் மட்டுமே.

விடிவெள்ளி:

  • அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
  • பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் ஈடுபட்டுத் தனது 80 வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

திருமண உதவித் திட்டம்:

  • 1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

Leave a Reply