சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

உ.வே.சா:

  • “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கபடுபவர்.
  • உ.வே.சா.இன் ஆசிரியரே “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்”.

இளமையும் கல்வியும்:

  • மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார்.
  • பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.
  • தமது தந்தையிடமே கல்வி கற்றார்.

கல்வியே வாழ்க்கை:

  • மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார்.
  • அவரை “திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்” என்றே அழைப்பர்.
  • அவரிடம் “கல்வி கற்க வேண்டும்” என்ற வேட்கை தணியாததாக இருந்தது.
  • “கல்வியே வாழ்கை” என்று இருந்தவர்.

தமிழ் கற்பித்தல்:

  • மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.
  • குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • இவர் சில காலம் திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக பணியாற்றினார்.
  • திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான் உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த் தொண்டு:

  • இவர், 80கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
  • கோவில்களை பற்றிய “தலபுராணங்கள்” பல இயற்றியுள்ளார்.

பண்பு நலன்கள்:

  • மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர்.
  • நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
  • ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தார்.
  • அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை “நீற்றுக்காரத் தெரு” எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார் “இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு” என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)

நோய்க்கு மருந்து இலக்கியம்:

  • தனக்கு உடல்நிலை சரியில்லாத பொது சற்று ஓய்வெடுத்தல் நல்லதென்று மற்றவர் கூற, “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறினார்.

மறைவு:

  • 01.02.1976 அன்று உலகவாழ்வை நீத்தார்

Leave a Reply