சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கோவூர்கிழார்

கோவூர்கிழார்:

இளமைகாலம்:

  • பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள “கோவூர்”.
  • மரபு: வேளாளர் மரபு.

பாடியவை:

  • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன.

அவைக்களத் தலைவர்:

  • நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான்.

போரைத் தவிர்த்த புலவர்:

  • சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.
  • நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.
  • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது” என்றர்.
  • கோவூர்கிழாரின் அறிவுரையை கேட்ட நெடுங்கிள்ளி ஆவூர்க்கோட்டையை விட்டு உறையூர் கோட்டைக்குசென்று கதவடைத்து கொண்டான்.
  • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், “நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே’ என்றார்.
  • ஆதலால் “போரை ஒழிமின்” என்றார்.

மலையமான் பிள்ளைகளை காத்தல்:

  • குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.
  • கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.
  • கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.

சிறை மீட்ட செம்மல்:

  • நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.
  • இளந்தத்தனாரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை சிறையிலிட்டான்.
  • கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.

Leave a Reply