சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருமந்திரம்

திருமந்திரம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
-திருமூலர்

சொற்பொருள்:

  • திடம் – உறுதி
  • மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
  • உபாயம் – வழிவகை

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
  • காலம் – ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.

நூல் குறிப்பு:

  • சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
  • இதற்குத் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேருபெயரும் உண்டு.
  • இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • “ஒன்றே குளம் ஒருவனே தேவன்” என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.

Leave a Reply