சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விக்ரமசோழன் உலா

விக்ரமசோழன் உலா

பாடலின் பொருள்:

  • குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் = கவேரன்.
  • தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் = சோழன் கரிகாலன்.
  • பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சோழன் செங்கணான்.
  • போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் = சோழன் விசயாலயன்.
  • சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன் = சோழன் முதல் பராந்தகன்.
  • பதினெட்டு சிற்றூர்களையும் வென்று மலைநாடு வென்றவன் = சோழன் முதல் இராசராசன்.
  • வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் = சோழன் இராசேந்திரன்.
  • சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் = சோழன் இராசாதிராசன்.
  • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் = சோழன் இராசேந்திரன்.
  • திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் = சோழன் இராசமகேந்திரன்.

சொற்பொருள்:

  • குவடு – மலை
  • பொன்னி – காவிரி
  • கொத்து – குற்றம்
  • அரவம் – பாம்பு

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
  • சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
  • சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
  • இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
  • உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
  • பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
  • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
  • அவனின் தயார் மதுராந்தகி.
  • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

Leave a Reply