சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் யார் கவிஞன்?

யார் கவிஞன்?

காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.
– முடியரசன்

 

சொற்பொருள்:

  • கைம்மாறு – பயன்
  • மாசற்ற – குற்றமற்ற
  • தேட்டை – திரட்டிய செல்வம்
  • மீட்சி – மேன்மை
  • மாலை – நீங்க

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = முடியரசன்
  • இயற்பெயர் = துரைராசு
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
  • ஊர் = தேனி மாவட்டம் பெரியகுளம்
  • இயற்றிய நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
  • பணி = காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்.
  • பட்டம் = பறம்புமலையில் நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
  • பரிசு = பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966ஆம் ஆண்டின் தமிழக அரசு பரிசு.
  • சிறப்பு = முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
  • காலம் = 1920-1998

Leave a Reply