சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் வில்லிபாரதம்

வில்லிபாரதம்

வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் கல்ப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.

  • வில்லிப்புதூரார்

சொற்பொருள்:

  • வான்பெற்ற நதி – கங்கையாறு
  • களபம் – சந்தனம்
  • துழாய் அலங்கல் – துளசிமாலை
  • புயம் – தோள்
  • பகழி – அம்பு
  • இருநிலம் – பெரிய உலகம்
  • ஊன் – தசை
  • நாமம் – பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – வில்லிபுத்தூரார்
  • தந்தை – வீரராகவர்
  • ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
  • காலம் – பதினான்காம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
  • 4350 விருத்தப் பாக்களால் ஆனது.

Leave a Reply