சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி

சொற்பொருள்:

  • தீயின்வாய் – நெருப்பில்
  • சிந்தை – எண்ணம்
  • கூர – மிக
  • நவ்வி – மான்
  • முகில் – மேகம்
  • மதி – நிலவு
  • உகு – சொரிந்த(பொழிந்த)

இலக்கணக்குறிப்பு:

  • வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சம்
  • செந்நாய் – பண்புத்தொகை
  • கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை
  • கருமுகில், வெண்மதி – பண்புத்தொகை
  • கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சம்

பிரித்தறிதல்:

  • வாயினீர் = வாயின் + நீர்
  • வெந்துலர்ந்து = வெந்து + உலர்ந்து
  • காடிதனை = காடு + இதனை
  • கருமுகில் = கருமை + முகில்
  • வெண்மதி = வெண்மை + மதி

ஆசிரியர் குறிப்பு:

  • கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.
  • இவர் திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் பிறந்தவர்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அரசவைப் புலவர்.
  • “பரணிக்கோர் சயங்கொண்டார்” எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
  • இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களையும் இயற்றி உள்ளார்.
  • இவரது காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

  • ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்று பெயர்.
  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தமிழி தோன்றிய முதல் பரணி = கலிங்கத்துப்பரணி
  • கலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். அவ்வெற்றியை பாராட்டி எழுதப்பட்ட நூல் இது.
  • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
  • ஒட்டக்கூத்தர் இந்நூலைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்துள்ளார்.
ஆயிரம் யானை அமரிடை வென்ற
மாணவ னுக்கு வகுப்பது பரணி
– பன்னிரு பாட்டியல்
  • பேரறிஞர் அண்ணா, “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்றார்.

உலகளாவிய தமிழர்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி
– புறப்பொருள் வெண்பாமாலை
  • உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
  • இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
  • சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
  • சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
  • ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
  • இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.

Leave a Reply