சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நோய் நீக்கும் மூலிகைகள்

நோய் நீக்கும் மூலிகைகள்

துளசி:

  • துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
  • துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

கீழ்க்காய்நெல்லி:

  • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர்.
  • மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

தூதுவளை:

  • இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
  • இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
  • இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
  • வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார்.
  • இது குறள் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

குப்பைமேனி:

  • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
  • இதனை “மேனி துலங்க குப்பைமேனி” என்று சிறபிப்பர்.

கற்றாழை:

  • இது வறண்ட நிலத்தாவரம்.
  • இதனை “குமரி” என்பர்.
  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.

முருங்கை:

  • இதனை அரைத்து தடவினால் எலும்பு முறிவு விரைவில் கூடும்.
  • இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.

கறிவேப்பிலலை:

  • இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரிசெய்யும்.

கரிசலாங்கண்ணி:

  • இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
  • கண் பார்வையை தெளிவாக்கும்.
  • நரையை போக்கும்.
  • இதனை “கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்” என்று கூறுவர்.

பிற மூலிகைகள்:

  • மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும்.
  • அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
  • வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.

Leave a Reply