சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாட்டுப்புறப்பாடல்

நாட்டுப்புறப்பாடல்

பாடலின் பொருள்:

  • மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளி தான் விளக்கு.
  • பரந்த கடலே பள்ளிக்கூடம்.
  • கடலே எங்களின் உற்ற தோழன்.
  • மீன்பிடி வலையே படிக்கும் நூல்.
  • கட்டுமரமே வாழும் வீடு.
  • காயும் கதிரே வீட்டுக்கூரை.
  • மேகமே குடை.
  • பிடிக்கும் மீன்களே பொருள்கள்.
  • இடியும் மின்னலும் பார்க்கும் கூத்து.
  • வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
  • நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி.
  • மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு.
  • வணங்கும் தலைவர் பெருவானம்.

சொற்பொருள்:

  • விரிகடல் – பரந்த கடல்
  • காயும் ரவிசுடர் – சுட்டெரிக்கும் சூரியக் கதிர்
  • யோகம் – தியானம்

Leave a Reply