சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம்

சொற்பொருள்:

  • எம்பி – என் தம்பி
  • மடப்பிடி – பாஞ்சாலி
  • கோமான் – அரசன்
  • நுந்தை – நும் தந்தை
  • அடவி – காடு
  • தடந்தோள் – வலியதோள்
  • மருங்கு – பக்கம்
  • கா – காடு
  • குலவு – விளங்கும்
  • பண்ணவர் – தேவர்
  • அரம்பையர் – தேவமகிளிர்
  • வீறு – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • அழைத்தனன் – முற்றெச்சம்
  • மாநகர் – உரிச்சொற்றொடர்
  • சார்ந்தவர் – வினையாலணையும் பெயர்
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
  • அடவிமலையாறு – உம்மைத்தொகை
  • கடந்து – வினையெச்சம்
  • தடந்தோள் – உரிச்சொற்றொடர்
  • செறிந்து, பாய்ந்து – வினையெச்சம்
  • பாலாடையும் நறுநெய்யும் தேனும் – எண்ணும்மை
  • நீளமுடி, நன்செய், புன்செய் – பண்புத்தொகை
  • காத்தல் – தொழிற்பெயர்
  • தொல்லுலகு – பண்புத்தொகை
  • தாளமும் மேளமும் – எண்ணும்மை
  • பதமலர் – உருவகம்

ஆசிரியர் குறிப்பு:

  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார்.
  • இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
  • இவரின் துணைவியார் செல்லம்மாள்.
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.

நூல் குறிப்பு:

  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

சிறப்பு:

  • பாரதியார் “பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி” என்றேல்லாம் புகப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

Leave a Reply