சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள்

இக்காலக் கவிதைகள்

உரைநடைக் காலம்:

  • இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர்.
  • எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.

பாரதியார்:

  • பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது.
  • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.

பாரதிதாசன்:

  • தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
  • “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
  • இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

கவிமணி:

  • கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
  • கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்வனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
  • “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
  • மாதவம் செய்திட வேண்டுமம்மா”
  • “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
  • சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்”

நாமக்கல் கவிஞர்:

  • இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
  • “தமிழன் என்றோர் இனமுண்டு
  • தனியே அவற்கொரு குணமுண்டு”
  • “பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
  • பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
  • கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”

முடியரசன்:

  • இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?

சுரதா:

  • சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
  • அவரி “உவமைக் கவிஞர்” என்று அழைப்பர்.
  • மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்,
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.

வாணிதாசன்:

  • பாரதிதாசனைத் தொடர்ந்து இயக்கியின் அழகை படம்பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்கின.

மணிக்கொடி:

  • ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினர்.

எழுத்து:

  • எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.

வல்லிக்கண்ணன்:

  • புதுகவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.

என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.

Leave a Reply