தேவாரம்

தேவாரம்

தேவாரம்

திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு

  • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
  • திருநாவுக்கரசரின் பெற்றோர் = புகழனார், மாதினியார்.
  • திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார்.
  • திருநாவுக்கரசரின் இயற் பெயர் = மருணீக்கியார்
  • திருநாவுக்கரசரின் சிறப்பு பெயர்கள் = தருமசேனர், அப்பர், வாகீசர், தாண்டக வேந்தர்.
  • திருநாவுக்கரசரின் நெறி = தொண்டு நெறி.
  • சைவ அடியார்களை எவ்வாறு அழைப்பர் = நாயன்மார்கள்.
  • நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர் = அறுபத்தி மூவர்.
  • சைவ சமயக் குரவர்கள் எத்தனை பேர் = நால்வர்.
  • சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர் = திருநாவுக்கரசர்.
  • திருநாவுக்கரசரின் பாடல்கள் “தேவாரம்” எனப் போற்றப்படுகிறது,
  • திருநாவுக்கரசர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை “தாண்டக வேந்தர்” எனவும் அழைக்கப்படுகிறார்.
  • திருநாவுக்கரசர் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
  • திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்து உள்ளது.
  • “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” எனப் பாடியவர் = திருநாவுக்கரசர்.
  • “இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” எனப் பாடியவர் = திருநாவுக்கரசர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

  • திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் தேவாரப் பாடல், மகாகவி பாரதியாரை “அச்சமில்லை, அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.
  • தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் மக்களைத் தட்டியெழுப்பியமகாகவி பாரதியின் “அச்சமில்லை ! அச்சமில்லை!” எனும் பாடலுக்கு முன்னோடி இத்திருத்தாண்டகப் பாடலே.

தேவாரம் நூல் குறிப்பு

  • தேவாரம் என்னும் சொல்லைத் தே + வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
  • தே + ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் மொத்தம் = பன்னிரண்டு.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டுனுள் முதல் ஏழும் “மூவர்தேவாரம்” எனப் அழைக்கப்படுகிறது.
  • அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் ஆகும்.

தேவாரம்

சொற்பொருள்

  • இடர் – துன்பம்
  • பிணி – நோய்
  • சேவடி – இறைவனின் செம்மையான திருவடிகள்
  • ஏமாப்பு – பாதுகாப்பு
  • நடலை – துன்பம்
  • நமன் – எமன்

இலக்கணக்குறிப்பு

  • நற்சங்கு – பண்புத்தொகை
  • வெண்குழை – பண்புத்தொகை
  • மலர்ச்சேவடி – உவமைத்தொகை
  • மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்

  • பிநியறியோம் = பிணி + அறியோம்
  • எந்நாளும் = எ + நாளும்
  • நாமென்றும் = நாம் + என்றும்

Leave a Reply