பழமொழி நானூறு

பழமொழி நானூறு

பழமொழி நானூறு

பழமொழி நானூறு ஆசிரியர்

  • ஆசிரியர் = முன்றுறை அரையனார்
  • பாடல்கள் = 400
  • பாவகை = வெண்பா

பழமொழி நானூறு விளக்கம்

  • ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழிநானூறு எனப் பெயர்பெற்றது.

பழமொழி நானூறு வேறு பெயர்கள்

  • பழமொழி
  • உலக வசனம்

ஆசிரியர் குறிப்பு

  • முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.

நூல் பகுப்பு முறை

  • இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
  • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
  • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
  • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
  • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
  • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)

பொதுவான குறிப்புகள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழிநானூறு
  • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
  • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே

மேற்கோள்

  • அணியெல்லாம் ஆடையின் பின்
  • கடன் கொண்டும் செய்வார் கடன்
  • கற்றலின் கேட்டலே நன்று
  • குன்றின்மேல் இட்ட விளக்கு
  • தனிமரம் காடாதல் இல்
  • திங்களை நாய்க் குரைத் தற்று
  • நுணலும் தன் வாயால் கெடும்

 

 

 

Leave a Reply