10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்
10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

  • சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
    • எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.

தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன

  • பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
    • எ.கா. கரும்பு தின்றான்.
  • மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது.
  • இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது.
  • எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

  • தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
    • வேற்றுமைத்தொகை
    • வினைத்தொகை,
    • பண்புத்தொகை,
    • உவமைத்தொகை,
    • உம்மைத்தொகை
    • அன்மொழித்தொகை
10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்
10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

வேற்றுமைத்தொகை என்றால் என்ன

  • ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
    • எ.கா – மதுரை சென்றார்.
  • இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது.
  • கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் “கு” என்னும் வேற்றுமை உருபு இல்லை.
  • அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
  • இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்றால் என்ன

  • எ.கா. தேர்ப்பாகன்
  • இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என விரிந்து பொருளை உணர்த்துகிறது.
  • கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ஓட்டும்” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
  • இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
    • தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

வினைத்தொகை என்றால் என்ன

  • காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை” எனப்படும்.
  • காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்.
    • எ.கா. = வீசுதென்றல், கொல்களிறு
  • வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள்.
  • இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின.
  • மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன.
  • காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
  • வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.

பண்புத்தொகை என்றால் என்ன

  • நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் டையில் “மை’ என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
    • செங்காந்தள் – செம்மையாகிய காந்தள்
    • வட்டத்தொட்டி – வட்டமான தொட்டி
    • இன்மொழி – இனிமையான மொழி

இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன

  • சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
    • எ.கா. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.
  • திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.

உவமைத்தொகை என்றால் என்ன

  • உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம் இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
    • எ.கா. = மலர்க்கை (மலர் போன்ற கை)
  • மலர் = உவமை
  • கை = உவமேயம் (பொருள்) இடையே ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

உம்மைத்தொகை என்றால் என்ன

  • இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
  • உம்மைத்தொகை “எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்” என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
    • எ.கா. அண்ணன் தம்பி, தாய்சேய்
  • அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

அன்மொழித்தொகை என்றால் என்ன

  • வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.
    • எ.கா. = சிவப்புச் சட்டை பேசினார்
    • எ.கா. = முறுக்கு மீசை வந்தார்
  • இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

 

 

 

 

 

Leave a Reply