11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி
11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி

  • சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின.
  • சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.

முத்தமிழ் காவியம்

  • அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
  • “முத்தமிழ் காவியம்” எனப்படும் நூல் = குற்றாலக் குறவஞ்சி
  • “முத்தமிழ் காப்பியம்” எனப்படும் நூல் = சிலப்பதிகாரம்.

குறவஞ்சி

  • குறவஞ்சி என்பது ஒருவகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும்.
  • இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
  • பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
  • இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது.
  • பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.

அருஞ்சொற்பொருள்

  • கொத்து – பூமாலை
  • குழல் – கூந்தல்
  • கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
  • வரிசை – சன்மானம்
  • நாங்கூழ் – மண்புழு.

இலக்கணக்குறிப்பு

  • மாண்ட தவளை = பெயரெச்சம்

குற்றால குறவஞ்சி நூல் குறிப்பு

  • தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி.

திரிகூடராசப்பக் கவிராயர்

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி
11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி
  • திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படும் நூல் = குற்றாலக் குறவஞ்சி
  • மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.
  • திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
  • குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
  • ‘திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்’ என்று சிறப்புப் பட்டப் பெயர் பெற்றவர்.
  • குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.
  • குறவஞ்சி நூல்களை பற்றி மேலும் 
    அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

Leave a Reply