11TH TAMIL திருச்சாழல்

11TH TAMIL திருச்சாழல்

11TH TAMIL திருச்சாழல்
11TH TAMIL திருச்சாழல்

11TH TAMIL திருச்சாழல்

  • மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை = திருச்சாழல் ஆகும்.
  • ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது = திருச்சாழல்
  • இவ்வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.

அருஞ்சொற்பொருள்

  • காயில் – வெகுண்டால்
  • அயன் – பிரமன்
  • மால் – விஷ்ணு
  • ஆலாலம் – நஞ்சு
  • அந்தம் – முடிவு

இலக்கணக்குறிப்பு

  • சுடுகாடு, கொல்புலி, குரைகடல் = வினைத்தொகைகள்
  • நல்லாடை = பண்புத்தொகை

பிரித்து எழுதுக

  • கற்பொடி = கல் + பொடி
  • உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
  • திருவடி = திரு + அடி

சாழல் என்றால் என்ன

  • சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
  • ஒரு பெண் வினா கேட்க, மற்றொரு பெண் விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
  • இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும்.
  • திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
  • திருச்சாழல் பயன்படுத்தி பாடல் பாடியுள்ள ஆழ்வார் = திருமங்கையாழ்வார்.
  • மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.

திருவாசகம் நூல் குறிப்பு

  • திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
  • இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
  • இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.
  • திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன.
  • இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.
  • இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
  • பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள்.
  • ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது முதுமொழி.
  • திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது.
  • இறைவனின் பெருமையைத் பேசும் வகையில் மாணிக்கவாசகர் திருச்சாழல் வகையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை = 20.
  • ஜி.யு. போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மாணிக்கவாசகர் வரலாறு

  • மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
  • திருவாதவூரைச் சேர்ந்தவர்.
  • இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
  • மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவாகும்.

பன்னிருதிருமுறைகள்

 

1 thought on “11TH TAMIL திருச்சாழல்”

Leave a Reply