6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Table of Contents

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரங்கள்

  • பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள் = ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ.
  • ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் “சிந்துவெளி நாகரிகத்தை” சார்ந்த நகரங்கள் ஆகும்.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்

  • உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம்.
  • இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

7.6x

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

  • தமிழகத்தின் மிகவும் தொன்மையான நகரங்கள் = மதுரை, கொடுமணல், கீழடி, கருவூர் (கரூர்), உறையூர், காஞ்சிபுரம்.
  • தமிழகத்தின் புகழ்பெற்ற தொன்மையான நகரங்கள் = மதுரை, காஞ்சிபுரம்.

தமிழகத்தின் தொன்மையான துறைமுகங்கள்

  • தமிழகத்தின் மிகவும் தொன்மையான துறைமுகங்கள் = மாமல்லை, அரிக்கமேடு, பூம்புகார், தொண்டி, அழகன்குளம், காயல்பட்டினம், கொற்கை.
  • தமிழகத்தின் புகழ்பெற்ற தொன்மையான துறைமுகம் = பூம்புகார்.

பூம்புகார் நகரம்

  • சிலப்பதிகார காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர்.
  • துறைமுக நகரம்.
  • இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.

பூம்புகார் துறைமுகம்

  • பூம்புகார் நகரின் வேறு பெயர்கள் = புகார், காவிரிபூம்பட்டினம்.
  • சோழ அரசர்களின் துறைமுகம் = பூம்புகார்.
  • பூம்புகார் நகரில் நடைபெற்ற வணிகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல்கள் = பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் (புகார் காண்டம்), மணிமேகலை.
  • சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை = மாநாய்கன்.
  • “மாநாய்கன்” என்பதன் பொருள் = பெருங்கடல் வணிகன்.
  • கோவலனின் தந்தை = மாசாத்துவான்.
  • “மாசாத்துவான்” என்பதன் பொருள் = பெருவணிகன்.
  • கிரேக்கன், ரோம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வணிகர்கள் இங்கு வந்து தங்கி வணிகம் செய்துள்ளனர்.
  • அதனால் வெளிநாட்டவர் குடியிருப்புகளும் தோன்றின.
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

பட்டினப்பாலை ஆசிரியர்

  • “பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள். மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றனர். கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள் கருதினர்” என்று கூறும் சங்க இலக்கிய நூல் = பட்டினப்பாலை.
  • பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 2-ம் நூற்றாண்டு.

பூம்புகார் நகரில் இறக்குமதி செய்யபப்ட்ட பொருள்கள்

  • குதிரைகள் = கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டன.
  • கருமிளகு = தரைவழியாக இறக்குமதி செய்யபப்ட்டன.
  • தங்கம் = வடமலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
  • சந்தனம் = மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
  • முத்து = தென்கடல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
  • பவளம் = கிழக்குப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
  • உணவுப் பொருள்கள் = ஈழத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

பூம்புகாரில் கப்பல் கட்டும் தளம்

  • பூம்புகார் நகரில் கப்பல் கட்டும் தளம் மற்றும் கப்பல் செப்பனிடும் தளம் இருந்ததாக கூறப்படுகிறது.

பூம்புகார் நகரின் அழிவு

  • கி.பி (பொ.ஆ). 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்த புகார் நகரம் கடற்கோள் அல்லது கடற்சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மதுரை நகரம்

  • சங்கம் வளர்த்த நகரம் = மதுரை நகரம்.
  • பண்டைய காலத்தில் மதுரை நகரை ஆண்டவர்கள் = பாண்டியர்கள், சோழர்கள், களப்பிரர்கள்.
  • இடைக்காலத்தில் மதுரை நகரை ஆண்டவர்கள் = பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், நாயக்கர்கள்.

பண்பாட்டுக் கலப்பு

  • பல்வேறு மன்னர்கள் ஆண்டதன் விளைவாக மதுரையில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பிற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்ற இடம் = கீழடி.

தமிழ்ப் பணி செய்த புலவர்கள்

  • சங்கம் அமைத்து தமிழை வளர்த்த நகரம் = மதுரை.
  • கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்களின் எண்ணிக்கை = 49.

அகில், சந்தனம்

  • தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
  • கிழக்கு கடற்கரையில் அமைந்தள்ளது தொண்டி நகரம்.

பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமன்

  • பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமன், பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகேயுள்ள “உவரி” என்னும் இடத்தில் இருந்து முத்தினை இறக்குமதி செய்துள்ளார்.
  • ரோமானிய நாணயங்கள் அடிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூங்கா நகரம் என அழைக்கப்படக் காரணம்

  • நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டு வகை அங்காடிகள் மதுரையில் இருந்தன.
  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும்.
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.
  • இரவு – பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.

காஞ்சி நகரம்

  • கல்வி கற்பதற்கான பள்ளிகள் அதிகளவில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட இடம் = காஞ்சி நகரம்.
  • சீனப்பயனை யுவான் சுவாங், கூடுதல் படிப்பிற்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து பயின்றுள்ளார்.

நகரங்களில் சிறந்தது காஞ்சி

  • “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறியவர் = காளிதாசர்.
  • “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறியவர் = திருநாவுக்கரசர் நாயன்மார்.
  • “புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று” என்று கூறியவர் = சீனப் பயணி யுவான் சுவாங்.
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

கோயில்களின் நகரம்

  • “கோவில்களின் நகரம்” என்று அழைக்கப்படுவது = காஞ்சி நகரம்.
  • காஞ்சியில் உள்ள “கைலாசநாதர் கோவிலை” கட்டியவர் = பல்லவ மன்னன் இராஜசிம்மன்.
  • பௌத்த பெண் துறவியான “மணிமேகலை”, தனது இறுதிக் காலத்தை காஞ்சியில் கழித்தார்.

ஏரிகளின் மாவட்டம்

  • “ஏரிகளின் மாவட்டம்” என்று அழைக்கப்படுவது = காஞ்சிபுரம் மாவட்டம்.
  • காஞ்சி நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டுள்ளன.
  • நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் நகரம் = காஞ்சிபுரம் நகரம்.

புகார், மதுரை, காஞ்சி நகரம்

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

  • புகார் நகரம் = துறைமுகம் நகரம்
  • மதுரை நகரம் = வணிக நகரம்
  • காஞ்சி நகரம் = கல்வி நகரம்

சேர சோழ பாண்டிய தொண்டை நாடுகள்

  • சேர நாடு = கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்
  • சோழ நாடு = தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்
  • பாண்டிய நாடு = மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
  • தொண்டை நாடு = காஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி.
  • சோழ நாடு = சோறுடைத்து
  • பாண்டிய நாடு = முத்துடைத்து
  • சேர நாடு = வேழமுடைத்து
  • தொண்டை நாடு = சான்றோருடைத்து.

6TH HISTORY தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

புத்தக வினாக்கள்

  1. 6500 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிகத்தின் நகரம்? = ஈராக்
  2. இவற்றுள் எது தமிழக நகரம்? = காஞ்சி நகரம்
  3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்? = காஞ்சிபுரம்.
  4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது? = கல்லணை, காஞ்சிபுரம் ஏரிகள்.
  5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரம் அல்ல? = சென்னை.
  6. கீலடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்? = மதுரை.
  7. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _________? = பல்லவ மன்னன் இராஜசிம்மன்
  8. கோவில்களின் நகரம் என அழைக்கப்படுவது ______________? = காஞ்சிபுரம்
  9. மாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _______________? = பெருவணிகன்.
  10. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாகப் பண்பாட்டுப் பரிமாற்றம் நடைபெற்றது? = சரி.
  11. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்? = சரி.
  12. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன? = சரி.
  13. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்? = சரி.

 

 

Leave a Reply