ஓவியக்கலை

ஓவியக்கலை

ஓவியக்கலை

ஓவியக்கலை

  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

கோட்டோவியங்கள்

  • சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கண்ணெழுத்து

  • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
  • தாம் வரைந்த ஓவியங்களை முதலில் “கண்ணெழுத்து” என்றே வழங்கினர்.

எழுத்து

  • எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

கோட்டோவியங்கள்

  • ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
  • இவ்வாறு வரையப்படுபவை “கோட்டோவியங்கள்” எனப்படும்.

நடுகல் வணக்கம்

  • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
  • நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.

ஓவியக்கலை

ஓவியக்கலையின் வேறுபெயர்கள்

ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

ஓவியக் கலைஞனின் வேறு பெயர்கள்

ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

நச்சினார்கினியர் இலக்கணம்

  • நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.

ஓவியக் குழுக்கள்

  • ஓவிய கலைஞர் குழுவை “ஓவிய மாக்கள்” என்று அழைத்தனர்.
  • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
  • பெண் ஓவியர் = சித்திரசேனா

சிலப்பதிகாரம்

  • ஆடல் மகள் மாதவி, “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்” எனச் சிலம்பு பகிர்கிறது.

வரைகருவிகள்

  • வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
  • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயர்.

வரைவிடங்கள்

  • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில் அம்பலம்
  • இறை நடனம் புரிவதற்கே “சித்திர சபை” ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

ஓவியக்கலை

புறநானூறு

“ஓவத்தனைய இடனுடை வனப்பு”
– புறநானூறு
  • இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

ஓவிய எழினி

  • நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை “ஓவிய எழினி” கொண்டு அறிகிறோம்.

புனையா ஓவியம்

  • வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
  • இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

நெடுநல்வாடை

  • ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.

தமிழரின் ஓவிய மரபு

  • ஓவியங்களில் “நிற்றல், இருத்தல், கிடத்தல்” ஆகிய மனித இயல்புகளையும்
  • “வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை” ஆகிய மெய்ப்பாடுகளையும்
  • “உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

மகேந்திரவர்மப் பல்லவன்

  • சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
  • மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
  • 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
  • கல்வெட்டுகள் இவனைச் “சித்திரகாரப்புலி” எனப் புகழ்கின்றன.
  • “தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்

  • திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
  • புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
  • கி.பி.9ஆம் நூற்றாண்டில் “அவனிப சேகர ஸ்ரீவல்லபன்” என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் “இளம்கௌதமன்” இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள் கூறுகிறது.

சோழர் கால ஓவியங்கள்

  • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
  • அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது

 

 

கலைகள்

1 thought on “ஓவியக்கலை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *