அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் கடிதங்கள்
அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் கடிதங்கள்

  • திராவிட நாடு, காஞ்சி இதழ் மூலம் கடிதங்கள் எழுதியவர் – அண்ணா
  • “தம்பிக்கு” என கடிதம் எழுதியவர்.
  • நான்மாடக்கூடலில் நிற்கின்றேன், நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்று தமிழகத்தின் அறிவுக்கோட்டமாய்த் திகழ்ந்து இம்மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கிறேன் என்றவர் – அண்ணா

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • ஆசிரியர் கல்கியால் தமிழ் நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா என்று பாராட்டப்பட்டவர் – அறிஞர் அண்ணா.
  • போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது கல்வி மட்டுமே.
  • பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் போர்க் கருவிகள்.
  • எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.
  • ஓராயிரம் ஆபத்துக்கள் ஓயாமல் நம்மை நோக்கி வந்தாலும். நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல நாட்டுத் துரோகி.
  • ஆளப்பிறந்தவன் ஆண்மகன். அவன் இஷ்டத்துக்கு ஆடிப் பிழைக்க வேண்டியவள் பெண் மகள் இப்படிப் பேசிடும் பண்பு படைத்தது இந்து மதம். இந்த இந்து மதத்தை நம்பிக் கிடக்கும் நாடு உருப்படாது.
  • நான் எப்போதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.
  • ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

அண்ணாவின் கடிதங்கள்

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
  • சிறந்த வரலாறுகளைப் படித்தால் தான் இளம் மனதில் புது முறுக்கு ஏற்படும்.
  • நாள், கொள், நட்சத்திரம், சகுனம், சாஸ்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்.
  • தன்னை வென்றவன் தரணியை வெல்வான்.
  • பகைவர்கள் தாக்கி தாக்கி தங்கள் பலத்தை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
  • எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன்தராது.
  • பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவு வளராது நம் நிலையும் உயராது.
  • விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிக மிக தீங்கு.
  • சமூக புரட்சி பணியில் ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானது தான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
  • வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அதை அழகான சிற்பமாக வடித்து ரசியுங்கள்.
  • பாடத்திட்டத்தில் பகுத்தறிவை புகுத்தினால் தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனதில் உள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கது போல கருத்து வளரும்.
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  • புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும்… புகழை தேடி நாம் அலையக் கூடாது.
  • உலகத்தின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
  • ஒரு சிறந்த புத்தகத்தை போல சிறந்த தோழனும் இல்லை. நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை.

 

 

 

Leave a Reply