சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழர் வானியல்

தமிழர் வானியல்

வானியல் அறிவு:

  • உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
– தொல்காப்பியம்
  • இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.
மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?

  • பதினைந்தாம் நூற்றாண்டில் தான் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார்.. ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
  • பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலன் கண்டுபிடித்து சொன்னார்.
  • ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம் குரலில் கூறியுள்ளார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

ஞாயிற்றுக் காட்சி:

  • வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
  • சிலபதிகாரத்தில் இளங்கோவடிகள், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்று போற்றியுள்ளார்.
  • ஞாயிற்றைச் சுற்றிய பாதையை “ஞாயிறு வட்டம்” என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

திங்கள் தோற்றம்:

  • தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை “நாள்மீன்” என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை “கோள்மீன்” என்றும் அழைப்பர்.
  • திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, என்பதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
  • திங்களைப் பாம்பு கொண்டற்று என்னும் குறள் “திங்கள் மறைப்பு”(சந்திரகிரகணம்) பற்றியதாகும்.

கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:

  • கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
  • செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
  • வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர். வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை “விடிவெள்ளி” என்றனர்.
  • புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு “அறிவன்” என்றும் பெயருண்டு.
  • வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
  • சனிக்கோளைக் “காரிக்கோள்” என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

தூமகேது:

  • தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
  • தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வான்வழிப் பயணம்:

  • “வளவன் ஏவா வானவூர்தி”(புறநானூறு) கூறுகிறது.
  • வானூர்தி ஒட்டுகிறவனைத் தமிழில் “வலவன்” என அழைத்தனர்.
  • சீவகசிந்தாமணியில் “மயிற்பொறி விமானத்தின்”  கூறப்பட்டுள்ளது.
  • கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய “புட்பக விமானமும்”, பெருங்கதையில் “வானூர்தி வடிவமும்” அதனை இயக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply