சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர்

வாழ்க்கை குறிப்பு:

  • பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம்
  • ஊர் = சங்கரன்கோவில்
  • கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
  • காலம் = 07.02.1902 – 15.01.1981
  • சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.

தமிழ்பற்று:

  • தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.

தமிழை வளர்த்தவர்:

  • தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் = கால்டுவெல்
  • தனித் தமிழுக்கு வித்திட்டவர் = பரிதிமாற்கலைஞர்
  • தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் = மறைமலையடிகள்
  • தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் = தேவநேயப்பாவாணர்

தமிழை மீட்டல்:

  • மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
  • உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
  • “உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்” என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
  • “தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்” என்று கூறினார்.

அனைத்தும் தமிழில்:

  • கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
  • பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.

பகலுணவு, இரவுணவு:

  • ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
  • அங்கு ஒருவர் பாவனாரிடம், “ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார்.
  • பாவாணர், “பகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுதுண்ண நேர்ந்தது), இரா உணவு  இரா உணவாகவும்(அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன” என்றார்.
  • தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.

நீலமலை(நீலகிரி):

  • ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
  • கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
  • கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, “உண்ட வீட்டிற்கு எதாவது செய்யவேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது” என்றர்.

பாவாணரின் படைப்புகள்:

  • தமிழ் வரலாறு
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாடு விளையாட்டுகள்
  • தமிழர் திருமணம்
  • வடமொழி வரலாறு
  • தமிழர் மதம்
  • மண்ணிலே வின்
  • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
  • திருக்குறள் மரபுரை

அகரமுதலி:

  • பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
  • இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தன்மானம் மிக்கவர்:

  • தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று வெளியேறினார்.

சிறப்புகள்:

  •  பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
  • இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையதிற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைகப்பட்டுள்ளன.

தமிழன்னைக்கு பெருமை:

  • மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.

Leave a Reply