சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரிகடுகம்

திரிகடுகம்

இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
– நல்லாதனார்

சொற்பொருள்:

  • பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
  • சாயினும் – அழியினும்
  • தூஉயம் – தூய்மை உடையோர்
  • ஈயும் – அளிக்கும்
  • நெறி – வழி
  • மாந்தர் – மக்கள்
  • வனப்பு – அழகு
  • தூறு – புதர்
  • வித்து – விதை

ஆசிரியர் குறிப்பு:

  • திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
  • இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.
  • இவரைச், “செறுஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நூல் குறிப்பு:

  • திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நூறு வெண்பாக்களை கொண்டது.
  • “சுக்கு, மிளகு, திப்பிலி” ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு “திரிகடுகம்” எனப் பெயர்.
  • அதுபோல், திரிகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.

Leave a Reply