சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு

சொற்பொருள்:

  • நிழற்றிய – நிழல் செய்த
  • துஞ்சான் – துயிலான்
  • மா – விலங்கு
  • நாழி – அளவுப்பெயர்
  • ஈதல் – கொடுத்தல்
  • துய்ப்போம் – நுகர்வோம்

இலக்கணக்குறிப்பு:

  • வெண்குடை – பண்புத்தொகை
  • நாழி – ஆகுபெயர்
  • ஈதல் – தொழிற்பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
  • இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
  • பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார்.

நூல் குறிப்பு:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Leave a Reply