சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
- சீக்கிய மதத்தின் முதல் குரு யார் = குருநானக்.
- சீக்கிய மதத்தின் கடைசி குரு யார் = குரு கோவிந்த்சிங்.
- கர்தார்பூர் (பாகிஸ்தானில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குருநானக்.
- கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.
- “அமிர்தசரஸ்” என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர் = குரு ராம் தாஸ்.
- அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டியவர் = குரு அர்ஜூன் தேவ்.
சீக்கிய குருக்களின் பட்டியல்
- குரு நானக் தேவ்
- குரு அங்கத் தேவ்
- குரு அமர்தாஸ்
- குரு ராம் தாஸ்
- குரு அர்ஜன் தேவ்
- குரு ஹர் கோவிந்த்
- குரு ஹர் ராய்
- குரு ஹர் கிருஷன்
- குரு தேக் பகதூர்
- குரு கோவிந்த் சிங்

முதல் சீக்கிய குரு
- முதல் சீக்கிய குரு = குருநானக்.
- இவரின் காலம் = கி.பி. 1469-1539
- சீக்கிய மதத்தை நிறுவியவர் (சிக்கந்தர் லோடி காலத்தில் இம்மதத்தை நிறுவினார்)
- நிர்குண துறவி பிரிவைச் சேர்ந்தவர்
- லாகூரில் உள்ள தல்வாண்டியில் பிறந்தார்
- இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
- சிலை வழிபாட்டை கண்டித்தார்.
- இவரின் சீடர் = மர்தானா
- “கடவுள் ஒருவரின் நற்பண்புகளை மட்டுமே அறிவார், அவருடைய ஜாதியைக் கேட்க மாட்டார், எதிர்காலத்தில் சாதி இருக்காது” என்று கூறியவர் = குருநானக்.
- “ஆண்களைப் பெண்கள் பெற்றெடுக்கும் போது அவர்கள் எவ்வாறு தாழ்ந்தவர்களாக இருக்க முடியும்? பெண்களும் ஆண்களும் கடவுளின் கிருபையில் பங்கு கொள்கிறார்கள் மற்றும் அவருக்கு அவர்கள் செய்யும் செயல்களுக்கு சமமான பொறுப்பு” ஏறனு கூறியவர் = குருநானக்.
- ஆண் – பெண் சமம் பற்றி கூறினார்.
- இவர் ஞானோதயம் அடைந்த இடம் = சுல்தான்பூர்.
- சமபந்தி உணவு கூடமான “லாங்கர்” முறையை அறிமுகம் செய்தார்.
- கர்தார்பூர் (பாகிஸ்தானில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குருநானக்.
- கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.
- முதல் குருத்வாராவை (தர்மசாலா) உருவாக்கிய சீக்கிய குரு = குருநானக்.
- சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
குரு அங்கத்
- இரண்டாவது சீக்கிய குரு.
- இவரின் காலம் = கி.பி. 1504-1552
- குருநானக் தேவ் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். இது “ஜனம் சகி” என்று அழைக்கப்படுகிறது.
- குருமுகி எழுத்துமுறையை அறிமுகம் செய்தவர்.
- கண்ணோசி போரில் தோற்ற பிறகு, ஹுமாயூன் இவரை தேடி வந்து சந்தித்துள்ளார்.
குரு அமர் தாஸ்
- இவரின் காலம் = கி.பி. 1479-1574
- அணைத்து சாதியினரும் சேர்ந்து உண்ணும் முறையை துவக்கி வைத்தார்.
- “சீக்கிய குரு” என்ற பட்டத்தை பெற்றவர்.
- இவரின் திட்டத்திற்கு முகலாய அரசர் அக்பர் நிதியுதவி அளித்தார்.
- சதி உடன்கட்டை ஏறுதலை தடை செய்தார்.
- “கோயிந்த்வால்” நகரை உருவாக்கியவர் = குரு அமர் தாஸ்.
- சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
குரு ராம் தாஸ்
- இவரின் காலம் = கி.பி. 1534-1581
- குரு அமர்தாஸின் மருமகன்
- அனைத்து அடுத்தடுத்த குருக்களும் ராம் தாஸின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
- “ஆனந்த கராஜ்” எனப்படும் சீக்கிய திருமண விழாவிற்கு பாடல்களை இயற்றியவர் இவர்.
- “ராம்தாஸ்பூர்” நகரி உருவாக்கினார். இதுவே அமிர்தசரஸ் நகராகும்.
- “அமிர்தசரஸ்” என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர் = குரு ராம் தாஸ்.
- இவருக்கு 500 பிகா நிலத்தை தானமாக வழங்கினார் அக்பர். இவ்விடத்தில் அமிர்தசரஸ் நகரம் உருவாக்கப்பட்டது.
- சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

குரு அர்ஜூன் தேவ்
- இவரின் காலம் = கி.பி. 1563-1606
- குரு ராம் தாஸின் மகன்
- முகலாய இளவரசர் குஸ்ராவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக முகலாய மன்னர் (ஜஹாங்கிர்) காவலில் வைக்கப்பட்ட சித்திரவதைக்குப் பிறகு இறந்தார்.
- முகலாய அரசனால் கொல்லப்பட்ட முதல் சீக்கிய குரு = குரு அர்ஜூன் தேவ்.
- அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டியவர் = குரு அர்ஜூன் தேவ்.
- சமய சீர்திருத்தவாதியான “கபீரின்” கருத்துக்களை தேடித்தேடி தொகுத்தார்.
- சீக்கிய போதனைகளின் சுருக்கத்தைத் தயாரித்தவர் = குரு அர்ஜூன் தேவ்.
- கி.பி 1604 இல் சீக்கியர்களின் புனித நூலான “குரு கிரந்த சாகிப்பை” தொகுத்தவர்
- இந்நூலினை “ஆதிகிரந்தம்” என்றும் கூறுவர்.
- “ஆதிகிரந்தம்” நூலை தொகுத்தவர் = குரு அர்ஜூன் தேவ்
- இதில் குரு அர்ஜன் தேவின் 2312 பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
- கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.
குரு ஹர்கோவிந்த்
- இவரின் காலம் = கி.பி. 1595-1644
- குரு அர்ஜன் தேவ்வின் மகன்
- இவர் கூறிய இரண்டு = ஒன்று மிரி (மதச்சார்பற்ற சக்தி) மற்றும் மற்றொன்று பிரி (ஆன்மீக சக்தி)
- கிபி 1608 இல் அகல் தக்த் கட்டினார்.
- “கிரத்பூர்” நகரை உருவாக்கிய சீக்கிய குரு = குரு ஹர்கோவிந்த்.
- சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
குரு ஹர் ராய்
- இவரின் காலம் = கி.பி. 1630-1661
- குரு ஹர்கோவிந்தின் மகன்
- ஷாஜகானின் மகன்களுக்கு இடையே நடந்த வாரிசுப் போர்களில் தாராவின் கூற்றை ஆதரித்தார்.
குரு ஹர்கிஷன்
- இவரின் காலம் = கி.பி. 1656-1664
- குரு ஹர் ராயின் மகன்.
- மிக இளம் வயதிலேயே சீக்கிய குருவாக உயர்ந்தவர் = குரு ஹர் கிஷன் (5 வயதில்).
- புது டெல்லியில் உள்ள குருத்வாரா பங்களா சாஹிப் இவரது நினைவாக கட்டப்பட்டது.
- சின்னம்மை நோயினால் இறந்தார்.
குரு தேக் பகதூர்
- இவரின் காலம் = கி.பி. 1621-1675
- குரு ஹர்கோவிந்தின் மகன்
- காஷ்மீரி இந்துக்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
- முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
- கொலை செய்யப்பட இரண்டாவது சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
- “ஆனந்த்பூர் சாஹிப்” நகரை உருவாக்கிய சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
- புது டெல்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

கடைசி சீக்கிய குரு
- கடைசி சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
- இவரின் காலம் = கி.பி. 1666-1700
- முகலாய அரசரின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
- குரு தேக் பகதூரின் மகன் சீக்கியர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து “கல்சா” என்னும் அமைப்பை உருவாக்கினார்.
- “கல்சா” என்னும் முறையை நிறுவிய சீக்கிய குரு யார் = குரு கோவிந்த் சிங்.
- 5K என்ற அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
- 5K = (Kesh, Kangha, Kara, Kachera, Kirpan)
- சீக்கிய மதத்தின் நித்தியமான மற்றும் இறுதியான உயிருள்ள குருவாக “குரு கிரந்த் சாஹிப்” நூலை அறிவித்த சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
-
-
-
- கேஷ் (ஆன்மீகத்திற்காக வெட்டப்படாத முடி)
- கங்கா (சுத்தத்திற்காக மரத்தாலான சீப்பு)
- காரா (நீதிக்கான நெறிமுறையைக் குறிக்கும் இரும்பு வளையல்)
- கிர்பான் (நீதிக்கான வாள்)
- கச்சேரா (அடக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற பருத்தி உள்ளாடை)
-
-
11-வது சீக்கிய குரு – குரு கிரந்த் சாஹிப்
- பத்தாவது குருவிற்குப் பிறகு மனித வடிவிலான வாரிசு யாரும் இல்லாத நிலையில், சீக்கிய மதத்தின் புனித நூலான ‘குரு கிரந்த் சாஹிப்‘ நித்தியமான 11-வது குருவாகப் போற்றப்படுகிறது.