சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியின் அமைப்பு

  • ஆசிரியர் = திருத்தக்கதேவர்
  • காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
  • சமயம் = சமணம்
  • பாவகை = விருத்தப்பா
  • பாடல்கள் = 3145 விருத்தங்கள்

சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்

  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் (அடியார்க்கு நல்லார்)
  • இயற்கை தவம்
  • முதல் விருத்தப்பா காப்பியம்
  • சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி

ஆசிரியரின் வேறு பெயர்கள்

  • திருத்தகு முனிவர்
  • திருத்தகு மகாமுனிவர்
  • தேவர்

சீவக சிந்தாமணி ஆசிரியர்

  • திருத்தக்கதேவர் சோழ மரபினர்.
  • இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
  • சீவக சிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
  • இவர் நூலை அரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
  • இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.

நூல் அமைப்பு

  • 13 இலம்பகம்
  • 3145 பாடல்கள்
  • முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்

நூல் குறிப்பு

  • சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
  • சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.

பொதுவான குறிப்பு

  • சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
  • நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
  • உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.
  • கிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
  • ஜி.யு.போப் திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப் புகழ்ந்துள்ளார்.
  • வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
  • கம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.

நச்சினார்கினியர்

  • இவர் சைவர்
  • சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
  • இவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப் போற்றுவர்.
  • இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
  • இவர் “தமிழ்மல்லி நாதசூரி” எனப் போற்றப்படுவார்

மேற்கோள்

  • இவ்வாறாகப் பிறப்பதுவோ

            இதுவோ மன்னற்கு இயல் வேந்தே

  • மெய்வகை தெரிதல் தம்மை

            விளங்கிய பொருள்கள் தம்மை

            பொய்வகை இன்றித்தேறல் காட்சி

             ஐம்பொறியும் வாட்டி

              உய்வகை உயிரைத்தேயாது

             ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்

              இவ்வகை நிறைந்த போழ்தே

              இருவினையும் கழியும் என்றான்

Leave a Reply