திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்

  • இவரின் ஊர் திருக்குறையலூர்
  • இவர் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர்
  • இவரின் இயற் பெயர் = கலியன்
  • இவரின் மனைவி = குமுதவல்லி
  • இவர் ஆண்ட நாடு = திருவாலி நாடு
  • இவருக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்தவர் = திருமால்
  • இவர் பாடிய ஆறு நூல்களும் தமிழ் வேதமாகிய திருவாய் மொழியின் ஆறு அங்கங்கள் எனப்படும்
  • முதன் முதலாக மடல் என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கியவர்
  • இவரின் மடல் கலிவென்பாவால் ஆனது
  • தாண்டகம் பாடிய ஆழ்வார் = திருமங்கையாழ்வார்
  • தாண்டகம் பாடிய நாயன்மார் = திருநாவுக்கரசர்
  • நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் கொடுத்த ஆழ்வார் = திருமங்கையாழ்வார்
  • நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் கொடுத்த நாயன்மார் = மாணிக்கவாசகர்
  • இவர் வழிப்பறியில் ஈடுப்பட்டு அடியவர்களுக்கு உணவளித்தார்
  • இவர் வழிப்போக்கராக வந்த திருமாலிடமே திருட முயன்றவர்
  • இவர் நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்தை உடைத்து ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் சுவர் கட்டியதாக கூறப்படுகிறது.
  • இவர் தம் பாசுரங்களைச் “சங்க முகத்தமிழ் மாலை” என்றும் “சங்கமலி தமிழ்மாலை” என்றும் கூறுவார்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மிக சிறப்புடையது இவர் தம் பாட்டே என்பார் மறைமலையடிகள்

சிறப்புப் பெயர்கள்

  • கலியன் (இயற் பெயர்)
  • கலிநாடன்
  • கலிகன்றி
  • அருள்மாரி
  • பரகாலன்
  • குறையலாளி
  • மங்கையர் கோன்
  • மங்கை வேந்தன்
  • ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
  • ஆறு அங்கம் கூறிய அறிநாடன்

படைப்பு

  • பெரிய திருமொழி
  • திருநெடுந்ததாண்டகம்
  • திருக்குறுந்தாண்டகம்
  • திருஎழுகூற்றறிக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்

மேற்கோள்

  • தாயினும் ஆயின செய்யும்

           நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்

           நாராயணா என்னும் நாமம்

  • காவியை வென்ற கண்ணாரிடம் என்

            ஆவியை இழந்த பாவியாய் இருந்தேன்

  • வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

            பெருந்துயிர் இடும்பையில் பிறந்து

            கூடினேன் கூடி இளையவர் தம்மொடு

Leave a Reply