நம்மாழ்வார்

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

  • இவரின் ஊர் ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர்
  • இவர் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர்
  • பெற்றோர் = காரியார், உடைய நங்கை
  • பிறந்தது முதல் 16 வயது வரை ஊமையாக இருந்தவர்
  • இவர் தவம் இருந்த மரத்தை “திருப்புளி ஆழ்வார்” என்பர்
  • இவரின் திருவாய் மொழியை “திராவிட வேதம், திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்ற திருமுறைகள் ஆயிரம்” எனப் போற்றுவர்
  • இவரின் நான்கு நூல்களையும் “சதுர்வேதத்திற்கு நிகர்” எனக்கூறுவர்
  • இதன் வியாக்கியானங்கள் “பகவத விஷயம்” எனப் போற்றப்படுகிறது
  • இவரின் பாடல்கள் இசையோடு பாடப்பட்டவை
  • நம்மாழ்வார் உடல் (அவையவி) மற்ற 11 ஆழ்வார்களும் உறுப்பு (அவையம்) போன்றவர்கள்
  • சைவத்திற்கு மாணிக்கவாசகர் போன்று வைணவத்திற்கு நம்மாழ் வார்
  • நம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றியவர் = மதுரகவியாழ்வார்
  • மானிடம் பாடிய ஆழ்வார் = நம்மாழ் வார்
  • மானிடம் பாடிய நாயன்மார் = சுந்தரர்
  • மலையை “நெடுமால்” எனவும், மழையை “நாராயணன் வருகை” எனவும், நிலவை “ஒளிமணிவண்ணா” எனவும் பாடியவர்
  • திரு.வி.க நம்மாழ்வாரை, “நம்மாழ் வார் ஒரு நாட்டிற்கோ, ஒரு சமயத்திற்கோ, ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவர் அல்லர். அவர் எல்லா நாட்டிற்கும், எல்லாச் சமயத்திற்கும், எல்லா இனத்திற்கும் உரியவர். எல்லோரும் “நம் ஆழ்வார்” எனப் போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ்நாட்டை மனத்தால் நினைத்து, வாயால் வாழ்த்தி, கையால் தொழுகிறேன்” என்றார்.

சிறப்புப் பெயர்கள்

  • சடகோபர்
  • நம் மாழ்வார்
  • பராங்குசர்
  • மாறன்
  • ஆறு அங்க பெருமான்
  • குருகைக்காவலன்
  • வகுளாபரணன்
  • தமிழ் மாறன்
  • வேதம் தமிழ் செய்த மாறன்
  • காரிமாறன்
  • வைணவத்து திராவிட சிசு

படைப்புகள்

  • திருவிருத்தம் = ரிக் வேதம்
  • திருவாசிரியம் = யசூர் வேதம்
  • திருவாய்மொழி = சாமவேதம்
  • பெரிய திருவந்தாதி = அதர்வணவேதம்

மேற்கோள்

  • அற்றது பற்றெனில் உற்றது வீடு
  • வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியல்லேன்
  • ஆடிஆடி அகம் கரைந்து, இசை

          பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி

          நாடி நாடி நரசிங்கா! என்று

         வாடி வாடும் இவ்வாள் நுதலே

  • உண்ணும் சோறும் பருகும் நீரும்

          தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்

Leave a Reply