இவர் முதுகலைத் தமிழ்ப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை மதுரைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்
மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்படும் தி.சு. நடராசன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர்.
தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்கு அடிப்படைகளை உருவாக்கித் தந்த பாளையங்கோட்டை நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தில் பயிற்சி பெற்று முழுமையான திறனாய்வாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டவர்
ஆசிரியர் பணி
திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்
மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்
போலாந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் பணி
இலக்கிய பணி
சாகித்திய அகாதெமி பொதுக்குழுவில் உறுப்பினராக இருந்தவர்
தற்போது வரை தொடர்ச்சியாக ஞானபீட விருதுத் தேர்வுக்குழுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்
மகாநதி என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் காந்தள் என்னும் திறனாய்வுக்கான இதழ் ஆசிரியப் பொறுப்பிலும் பணியாற்றியவர்