பள்ளு இலக்கியம்

பள்ளு இலக்கியம்

பள்ளு இலக்கியம்

பள்ளு இலக்கியம்

  • இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
  • இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
  • இது மருத நில நூலாக கருதப்படுகிறது
  • பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
  • இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி
  • பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
  • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம் பள்ளு ஆகும்

சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்து

தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்

புலனென மொழிப புலனுணர்ந் தோரே

  • சந்த நயம் மிக்கது இந்நூல் வகை
  • “நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது பழமொழி
  • முதல் பள்ளு நூல் = முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு

  • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
  • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
  • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்

Leave a Reply