11TH TAMIL பதிற்றுப்பத்து

11TH TAMIL பதிற்றுப்பத்து

11TH TAMIL பதிற்றுப்பத்து
11TH TAMIL பதிற்றுப்பத்து

11TH TAMIL பதிற்றுப்பத்து

  • “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்று கூறுகிறார் = வள்ளுவர்
  • பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்கிறார் = வள்ளுவர்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
  • இவன் வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன்.
  • தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
  • சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாகப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் கூறப்பட்டுள்ளது.

பாடாண் திணை என்றால் என்ன

  • பாடாண் திணையானது மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.

செந்துறைப் பாடாண்பாட்டு என்றால் என்ன

  • செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்.

ஒழுகு வண்ணம் என்றால் என்ன

  • வண்ணம் என்பது ஒலிநய (சந்தம்) வேறுபாடு ஆகும்.
வண்ணந் தாமே நாலைந் தென்பட

           – தொல். பொ. 524

  • ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதாகும்.
ஒழுகு வண்ண மோசையி னொழுகும்.

                தொல். பொ. 538

தூக்கு என்றால் என்ன

  • தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.

செந்தூக்கு என்றால் என்ன

  • செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.
வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே

            தொல் . பொ. 383

அருஞ்சொற்பொருள்

  • பதி – நாடு
  • பிழைப்பு – வாழ்தல்
  • நிரையம் – நரகம்
  • ஒரீஇய – நோய் நீங்கிய
  • புரையோர் – சான்றோர்
  • யாணர் – புது வருவாய்
  • மருண்டெனன் – வியப்படைந்தேன்
  • மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா – ஓயாத
  • கடுந்துப்பு – மிகுவலிமை
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஒடியா – குறையா
  • நயந்து – விரும்பிய

இலக்கணக்குறிப்பு

  • துய்த்தல் – தொழிற்பெயர்
  • ஒரீஇய – சொல்லிசை அளபெடை
  • புகழ்பண்பு – வினைத்தொகை
  • நன்னாடு – பண்புத்தொகை
  • மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்து எழுதுக

  • மண்ணுடை = மண் + உடை
  • புறந்தருதல் = புறம் + தருதல்

பதிற்றுப்பத்து நூல் குறிப்பு

  • எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.
  • சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடாண் திணையில் அமைந்துள்ளது.
  • முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை.
  • ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன
  • பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.
  • பாடப்பகுதிப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர்முன் நிரையபாலரைப் போலப் (நரகத்து வீரர்கள்) படைவெள்ளமாக நின்றதால் ‘நிரைய வெள்ளம்’ என்று தலைப்பு இடப்பட்டுள்ளது.
  • பாடப்பகுதியான இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
  • இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ண னார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

 

 

Leave a Reply