12ஆம் வகுப்பு தொகை நூல்கள்

12ஆம் வகுப்பு தொகை நூல்கள்

12ஆம் வகுப்பு தொகை நூல்கள்
12ஆம் வகுப்பு தொகை நூல்கள்

12ஆம் வகுப்பு தொகை நூல்கள்

  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது.
  • சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்பர்.
  • சங்க இலக்கியங்கள் = பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள்.
  • சங்க இலக்கியங்களை “மேற்கணக்கு நூல்கள்” என வழங்குவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6.3x

எட்டுத்தொகை நூல்கள் யாவை

  • நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.

எட்டுத்தொகை நூல்களை குறிப்பிடும் பாடல்

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)

ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று)

இத்திறத்த எட்டுத் தொகை”

எட்டுத்தொகையில் புறப்பொருள் நூல்கள்

  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு

எட்டுத்தொகையில் அகப்புற நூல்

  • எட்டுத்தொகையில் அகப்புறப் பாடல்களை கொண்ட நூல் = பரிபாடல்.

எட்டுத்தொகையில் அகப்பொருள் நூல்கள்

  • நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு

தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்பவை யாவை?

  • அகப்பொருள் பற்றிய நூல்களிலிருந்து பழந்தமிழ் மக்களின் மக்களின் அகவாழ்க்கை முறையினையும் புறப்பொருள் நூல்களிலிருந்து புறவாழ்க்கை முறையினையும் தெளிவாகக் காணலாம்.
  • சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்கின்றன.

குறிப்புப்பொருள் உத்தி என்றால் என்ன

  • சங்ககாலப் புலவர்கள் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
  • இவை இரண்டையும் குறிப்புப்பொருள் உத்தி என அழைப்பர்.

உள்ளுறை உவமை என்றால் என்ன

  • வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உத்தியாகும்.
  • உள்ளுறை உவமையில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும்;
  • உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது.
  • உவமிக்கப்படும் பொருள் தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும்.
  • உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.

இறைச்சி என்றால் என்ன

  • கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சியாகும்.
  • இதுவும் தெய்வம் நீங்கலாக உள்ள கருப்பொருளை வருணிக்கும் வருணனையில் குறிப்புப் பொருளாக அமையும் தன்மை கொண்டது.

 

 

 

 

Leave a Reply